நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

நீங்கள் சொன்ன பொய்கள் எவ்வளவு என்பதை நாளை நாங்கள் சொல்கிறோம் என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி தந்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஜூலை 28) விரிவாக பேசினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளித்துக் கொண்டே வந்தார்.

அவரின் பேச்சின் ஊடே, எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் சிலர் கூச்சலிட்டு இடையூறு செய்த வண்ணம் இருந்தனர். சபாநாயகர் எவ்வளவோ கேட்டும் அவர்கள் தங்களின் குறுக்கீடுகளை கைவிடவில்லை. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டு பேசினார்.

அவர் கூறியதாவது;

அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) மத்திய வெளியுறவு அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் வேறு ஏதோ சில நாடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்களின் கட்சியில் அந்நியர்களின் முக்கியத்துவம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களின் அனைத்து விஷயங்களும் இங்கே திணிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் தான் அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவர்கள் அங்கேயே தான் உட்கார்ந்து இருக்க போகிறார்கள்.

அவர்கள் (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) பேசும் போது, நாங்கள் பொறுமையாக கேட்டோம். நீங்கள் எத்தனை பொய்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை நாளை நான் இங்கே சொல்வேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம் இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையை கேட்க மறுக்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் பேசும் போது இதுபோன்ற குறுக்கீடுகள் ஏற்புடையதா? எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் இதை புரிய வைக்க வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...