”பிரதமர் மோடி தமிழகம் மீதும் தமிழ் மன்னர்கள் மீதும் தமிழ் கலாசாரத்தின் மீதும் பற்றாக உள்ளார்,” என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசியில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பலமாக உள்ளது. மோடி தமிழ் மன்னர்கள் , தமிழ் கலாசாரம், தமிழ் மீதும் பற்றாக உள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமான நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கின்றார்.
என்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் மோடி உள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடிய சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் மன்னர்களை பற்றியும் தமிழ் தலைவர்களை பற்றியும் தமிழகத்தின் வரலாற்று சுவடுகளை எடுத்துச் சொல்லி பேசுகின்ற தலைவராக பிரதமர் மோடி விளங்குவது தமிழகத்திற்கு பெருமை என்றார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |