பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? – அமித்ஷா

இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமித்ஷா, ப. சிதம்பரத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், “ ஆபரேஷன் மகாதேவில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தான் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள். பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே நான் ஸ்ரீநகர் சென்றேன். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் தப்பிச் சென்றுவிடாமல் தடுத்தோம். அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற 3 பேரும் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட 4 பேர், கொல்லப்பட்ட 3 பேரை அடையாளம் காட்டியுள்ளனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு எம்9 ரக துப்பாக்கி , 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மக்களை கொன்றுள்ளனர். அதனை நாங்கள் பறிமுதல் செய்துவிட்டோம்.

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் முலம் பிரதமர் மோடி கொன்றார். ஆபரேஷன் மகாதேவில் 3 பேரை சுட்டுக்கொன்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இனிவரும் காலத்தில் இந்தியாவுக்கு எதிராக யோசிக்க முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தியுள்ளோம். திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த பெண்ணின் வலியை நான் நேரில் உணர்ந்தேன். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக 3000 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதுதான். ஆனால், உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது? ( என ப. சிதம்பரத்திடம் அமித்ஷா கேள்வி). முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்?. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர ப.சிதம்பரம் முயற்சிக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கிவிட்டார். ராஜ்நாத் சிங் விளக்கத்துக்கு பிறகும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன. எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். உள்ளூர் பயங்கரவாதிகள் என சொல்ல ப சிதம்பரத்திடம் என்ன ஆதாரம் உள்ளது? .

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பிஹாரில் பிரதமர் மோடி பேசியது குறித்து இப்போது விளக்குகிறேன்.பஹல்காம் தாக்குதல் பற்றி பிரதமர் பேசியது தேர்தலுக்காக அல்ல. ஆபரேஷன் சிந்தூர் மூலம் 22 நிமிடங்களில் 9 முகாம்களை முற்றாக அழித்தோம். ஆபரேஷன் சிந்தூரின்போது பொதுமக்கள் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்குள் 100 கிமீ பயணித்து அவர்கள் நிலத்திலேயே அவர்களை தாக்கினோம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையதுதான். சிதம்பரம் & கோ ஆட்சியில் இருக்கும்போது தாக்கிய பயங்கரவாதிகளை மோடி ஆட்சியில் அழித்தோம். மோடி அரசு மன்மோகன் அரசைப்போல் வேடிக்கை பார்க்காது. காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்தோம். மோடி அரசு மன்மோகன் அரசைப்போல் அமைதியாக இருக்காது. பிரதமர் மோடி உத்தரவை அடுத்து அனைத்து பயங்கர முகாம்களையும் அழித்துவிட்டோம்.

இப்போது நடப்பது மோடி ஆட்சி. மன்மோகன் ஆட்சி அல்ல. நேருவின் போர் நிறுத்தால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. சிம்லா ஒப்பந்தத்தில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை பெற்றிருந்தால் பிரச்சினை வந்திருக்கிறாது. பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை ஏள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம். ” என்று பேசியிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...