பிரதமர் நரேந்திர மோடி, “பஹல்காம் தாக்குதல் இந்தியா, இந்திய மக்களுக்கு எதிரான சதித் திட்டம். பஹல்காம் தாக்குதல் இந்தியர்களை மத ரீதியாக பிளவுபடுத்த விதையாகத் தூவப்பட்டது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த கொடூரமான சம்பவம், அப்பாவி மக்களை அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது, கொடுமையின் உச்சம். இது இந்தியாவை வன்முறையின் நெருப்பில் தள்ள நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. இது இந்தியாவில் கலவரங்களைப் பரப்புவதற்கான ஒரு சதி. நாடு ஒற்றுமையுடன் அந்த சதியை முறியடித்ததற்காக இன்று நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. பல்வேறு எம்.பி.க்கள் பேசிய நிலையில், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இந்த விவாதத்தின் மீது பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பது கூட பாஜக அரசுக்குத் தெரியவில்லை. தனது இமேஜை காக்க ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். நமது படைகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவது அபாயகரமானது. இந்திய ராணுவத்தின் கைகளை பின்னால் கட்டாதீர்கள்” என ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசினார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |