ஜனாதிபதி-யுடன் மோடி சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் அடுத்தடுத்து சந்தித்து பேசியது, டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து, அமளியில் ஈடுபட்டு வருவதால் பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கியுள்ளன.

கடந்த மாதம் 21ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் , ‘ஆப்பரேஷன் சிந்துார் ‘ தொடர்பான சிறப்பு விவாதம் மட்டுமே இரு சபைகளிலும் நடந்துள்ளது.

அதே போல் கடந்த வாரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் நீட்டிப்பது தொடர்பாக தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானம் ராஜ்யசபாவில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து, அமளியில் ஈடுபட்டு வருவதால் பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கியுள்ளன.

கடந்த மாதம் 21ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் , ‘ஆப்பரேஷன் சிந்துார் ‘ தொடர்பான சிறப்பு விவாதம் மட்டுமே இரு சபைகளிலும் நடந்துள்ளது.

அதே போல் கடந்த வாரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் நீட்டிப்பது தொடர்பாக தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானம் ராஜ்யசபாவில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடுத்தடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் அலுவலகத்திடம் இருந்தோ அல்லது மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்திடம் இருந்தோ அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஜனாதிபதி மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில் மட்டும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல் வெளியானது.

பிரிட்டன் மற்றும் மாலத்தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு பின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை.

அதே போல், துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்த இரு வாரங்களுக்கு பின், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...