மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் மோடி பாரதீய நியாய சன்ஹிதாவா கொண்டு வந்தாா்: அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

இந்தியா்களை தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய அதே வேளையில், மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா் என்று மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவயைல் தேசிய இ-விதான் விண்ணப்பத்தை (என்இவிஏ) தொடங்கி வைத்துப் பேசுகையில் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: தில்லியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா்களைத் தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தனா். ஆனால், இந்தியா்களுக்கு நீதி வழங்குவதற்காக பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா்.

இந்தியா முழுவதும் காகிதமில்லா சட்டப்பேரவை சூழலை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டம் என்இவிஏ.

இது ஏற்கெனவே செயல்படுத்தப்படுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. முந்தைய அரசு என்ன நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பேசிய தில்லி முதல்வா் ரேகா குப்தா, ‘திங்கள்கிழமை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தனது அரசு கொண்டு வரும்’ என்று கூறினாா்.

‘முந்தைய அரசு பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த எதுவும் செய்யவில்லை. அது இந்த பிரச்னை பற்றி பேசியது. ஆனால், எதுவும் செய்யப்படவில்லை. பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்’ என்று அவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...