அதிக நாட்கள் பதவி வகித்த உள்துறை அமைச்சர்: அத்வானியின் சாதனையை முறியடித்த அமித்ஷா

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்தவர் என்று பாஜ மூத்த தலைவர் அத்வானி படைத்த சாதனையை அமித்ஷா முறியடித்துள்ளார். இதற்காக அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை கையாளும் திறன் கொண்டது மத்திய உள்துறை அமைச்சர் பதவி. நாடு சுதந்திரம் படைத்ததும் சர்தார் வல்லபாய் படேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார். அவர் 3 ஆண்டுகள் 119 நாட்கள் இந்தப் பதவியில் இருந்தார்.

அவருக்கு பிறகு, ராஜாஜி, கைலாஷ் நாத் கட்ஜூ, ஜிபி பன்ட், லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, சவான், பிரமானந்தா ரெட்டி, சரண் சிங், மொரார்ஜி தேசாய், ஜெயில் சிங், பூடா சிங், முப்தி முகமது சயீத், சந்திரசேகர், முரளி மனோகர் ஜோஷி, அத்வானி, சிவராஜ் பாட்டீல், சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, குல்சாரிலால் நந்தா ஆகியோரும் உள்துறை அமைச்சர் பதவியை தங்கள் வசம் வைத்து இருந்தனர்.

இதில், அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவி வகித்தவர் என்ற பெருமை தற்போதைய அமைச்சர் அமித்ஷாவுக்கு கிடைத்துள்ளது. அவர், கடந்த 2019ம் ஆண்டு மே 31ம் தேதி மத்திய உள்துறை அமைச்சராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி மீண்டும் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதன் மூலம் 2,258 நாட்கள் பதவி வகித்து இந்த சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னர் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 2,256 நாட்கள் ( 19 மார்ச் 98 – 13 அக்.,99 வரையிலும், 13 அக்.,99 முதல் 22 மே 2004 வரையிலும்) இந்தப் பதவியில் இருந்துள்ளார்.

இதற்கு முன்னர், நேரு ஆட்சி காலத்தில் கோவிந்த் வல்லபாய் படேல் 2,246 நாட்கள் ( 10 ஜன.,55 முதல் 17 ஏப்.,1957 வரையிலும்; 17 ஏப்.,1957- 7 மார்ச்1961) வரையிலும் இந்த பதவியில் அவர் இருந்தார்.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், 15 ஆக.,1947 முதல் 12 டிச.,1950 வரையிலும் 1,218 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட நாளான ஆக.,5ம் தேதியன்று, அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் வகித்தவர் என்ற பெருமையை அமித்ஷா பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...