தமிழக இயற்கை விவசாயிகளுடன் ஆர்வமுடன் உரையாடிய பிரதமர்

தமிழகத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடன், மோடி ஆர்வமுடன் கலந்துரையாடினார்.

டில்லி பார்லிமென்டில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தில், நேற்று தமிழகத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளான, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் கருப்பையா, இயற்கை விவசாயிகளான, விதை யோகநாதன், கணபதி அஜிதன், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் அவரை சந்தித்தனர்.

உற்சாகம் இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட, ‘எக்ஸ்’ தள பதிவில், ‘தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவை, நேற்று காலை பார்லிமென்டில் சந்தித்தேன். புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும், புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், அவர்களின் கவனம் மற்றும் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தது, உற்சாகம் அளிப்பதாக இருந்தது’ என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து, பிரதமரை சந்தித்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் கருப்பையா கூறியதாவது:

வரும் அக்., 16, 17, 18ம் தேதிகளில், கோவை கொடிசியா அரங்கில், இயற்கை விவசாயம் தொடர்பான மாநாடு நடக்க உள்ளது.

அதற்கு அழைப்பதற்காக பிரதமர் மோடியை சந்தித்தோம். எங்களுடன், 15 நிமிடங்கள் மிகவும் ஆர்வமுடன் பேசினார்.

மல்லிகை மாலை, வாழை நாரில் செய்யப்பட்ட சால்வை, சிறுதானியங்களில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை வழங்கினோம்.

கோரிக்கைகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, அதிக நிதி ஒதுக்க வேண்டும்; நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளே விற்பனையாளராக மாற அரசு உதவ வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

விளை பொருட்களை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் வாயிலாக, எப்படியெல்லாம் இயற்கை விவசாயத்தில் லாபம் பெற முடியும் என விவரித்தோம். அனைத்தும் கேட்டு உற்சாகமடைந்த அவர், எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...