பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; நிதின் கட்கரி

தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரிகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக வரி விதிக்கப்படும் வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது: இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுயசார்பை அடைய வேண்டும்.

தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் நமக்குக் கிடைத்தால், நாம் யாரையும் மிரட்ட மாட்டோம், ஏனென்றால் உலக நலன் மிக முக்கியமானது என்பதை நமது கலாசாரம் நமக்குக் கற்பிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பை இந்தியா எதிர்கொள்ளும் நேரத்தில், சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடி செய்வதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடுமையாக சாடி பேசி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...