‘இந்திய பொருளாதார வளர்ச்சியை அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை’

“இந்திய பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி ஒரு சிலருக்கு, பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளாததால், கூடுதலாக 25 சதவீத வரி விதித்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை, ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் உயர்த்தினார்.

நட்புறவில் விரிசல் எனினும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எல்லாம் இந்தியா அடிபணியாது என திட்டவட்டமாக கூறிய பிரதமர் மோடி, நாட்டின் நலனே முக்கியம் என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், இரு நாட்டின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சி ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களால், இதை எளிதாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானே எல்லாருக்கும் முதலாளி என்று கொக்கரிப்பவர்கள், இந்தியா எப்படி வேகமாக வளரலாம் என நினைக்கின்றனர். இதன் காரணமாகவே, இந்திய பொருட்கள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது.

‘சூப்பர்’ சக்தி இந்தியாவின் வளர்ச்சியை எந்தவொரு சர்வதேச சக்தியாலும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா உறுதியாக, ‘சூப்பர்’ சக்தி கொண்ட நாடாக வளரும்.

உலக பொருளாதாரத்தில் கடந்த 2014ல், இந்தியா 11வது இடத்தில் இருந்தது. இப்போது முதல் நான்கு இடங்களுக்குள் வந்துவிட்டது. நம் பொருளாதார வளர்ச்சி, 6.3 சதவீதமாக இருக்கிறது.

பிரதமராக மோடி பதவியேற்றபோது, நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வெறும் 600 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 24,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...