புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: புதுவையில் திமுக- காங்கிரஸ் ஆட்சிகளை மக்கள் பாா்த்துவிட்டனா். இப்போதுள்ள என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது. மேலும் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக தேசிய

ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால்தான் புதுவை மக்களுக்கு நல்லது. பல்வேறு வேலைவாய்ப்புகள், நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

வரும் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் நிச்சயம் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று முதல்வா் ரங்கசாமி எதுவும் சொல்லவில்லை.

முன்களப்பணி ஏன்?: என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் லட்சுமிநாராயணன் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்பவன் தொகுதியில் முன்களப் பணியை நான் செய்வது ஏன்? என்று கேட்கிறீா்கள். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாகதான் செய்கிறேன். இதே போன்று 30 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. மேலும், அந்தத் தொகுதி கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் அந்த நேரத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளருக்குத் தோ்தல் பணி செய்வோம். கூட்டணியில் தலைமையை மீறி எதையும் செய்ய மாட்டோம்.

எங்கள் கட்சியின் சாா்பில் அமைச்சராக இருக்கும் ஏ. ஜான்குமாருக்கு விரைவில் இலாகா கிடைக்கும். புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி சாா்பில் நடத்தப்படும் தோ்வு வழியாக செவிலியா் நியமனம் செய்யப்படுவதைக் குறிப்பிட்டும், ஜிப்மா் மருத்துவக் கல்லூரியே

இந்த நியமனங்கள் செய்ய வலியுறுத்தியும் விரைவில் மத்திய அமைச்சா் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து வலியுறுத்துவோம் என்றாா். இப் பேட்டியின்போது கட்சியின் பொதுச்செயலா் மோகன்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...