ஆபரேஷன் சிந்துாரில் புதிய சாதனை படைத்த எஸ் 400 கவசம்; சர்வதேச நிபுணர் வியப்பு

பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விமானப்படைத் தளபதி அமர்பிரித் சிங்கின் கருத்து சரியானது தான். இந்த தாக்குதலில் எஸ் 400 கவச அமைப்பு, சரித்திர சாதனை படைத்துள்ளது என்று சர்வதேச வான் வழித்தாக்குதல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நமது ராணுவம் மே 7ல் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

அந்த வகையில் இந்த சண்டையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர்பிரித் சிங் புதிய தகவலை கூறினார். இந்த தகவலுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.

இந்த சூழலில், விமானப்படைத் தளபதி அமர்பிரித் சிங்கின் கருத்திற்கு சர்வதேச நிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஆஸ்திரியாவை சேர்ந்த புகழ்பெற்ற வான்வழிப் போர் நிபுணர் டாம் கூப்பர் கூறியதாவது:இந்தியா விமானப்படை தளபதி கூறியது பலரும் அறிந்த உண்மை தான். மே மாதம் முதலே இந்த விவரங்கள் எங்களுக்கு தெரியும்.

S-400 கவச அமைப்பு 300 கி.மீ., தொலைவில் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி உள்ளது. தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தி வீழ்த்துவதில் இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

ஐந்து போர் விமானங்கள் மட்டுமல்ல; இன்னும் அதிகமான பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். உக்ரைன் போரிலும் ரஷ்யா, எஸ் 400 கவச அமைப்பை பயன்படுத்துகிறது. அங்கே, 200 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட இலக்குகளே வீழ்த்தப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா செய்திருப்பது பெரிய சாதனை.

இந்திய விமானப்படை தனது எஸ்.400 தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை அமைப்பை பாகிஸ்தானின் எல்லைக்கு மிக அருகில் நிலைநிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதல் எல்லைக்குள் இருந்தபடி ஏவுகணைகளை வீசி இந்திய படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது, உண்மையிலயே துணிகரமான சாகசம் தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...