அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடத்திய பேச்சு குறித்த விபரங்களை, பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பகிர்ந்து கொண்டார்.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போர் தொடுத்தது.
இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றன. உக்ரைன் உடனான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15ம் தேதி பேசினார். அமெரிக்காவின் அலாஸ்கா வில் நடந்த பேச்சில் எந்த முடி வும் எட்டப்படவில்லை.
இந்நி லையில், டிரம் புடனான பேச்சு குறித்த தகவல்களை , பிரதமர் நரேந்திர மோடியிடம், தொலைபேசி வாயிலாக அதிபர் புடின் நேற்று பகிர்ந்து கொண் டார்.
இ து குறித்து பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் கூறுகையில், ‘என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அலாஸ்காவில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்த தகவலை பகிர்ந்த என் நண் பரான ரஷ்ய அதிபர் புடினுக்கு நன்றி.
‘உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும். நம் தொடர்ச்சியான பேச்சு, பரிமாற்றம் வரும் நாட்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என, தெரிவித்துள்ளார்.
இருப்பினும், டிரம்ப் – புடின் இடையே நடந்த பேச்சு குறித்த விபரங்களை பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |