பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு ஆகஸ்ட் 22, 2025 அன்று பயணம் மேற்கொள்கிறார். போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். காலை 8 மணிக்கு கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலை எண் 31ல் 1.86 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழிச் சாலையாக ரூ.1,870 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலம் பாட்னாவில் உள்ள முகாமா மற்றும் பெகுசராய் இடையே நேரடி போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது. இதனால் பயண நேரம் குறையும். பின்னர் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இந்த புதிய மேம்பாலம் ராஜேந்திர சேட் என்ற பழைய மேம்பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்டுள்ளது. பழைய மேம்பாலம் மோசமான நிலையில் இருந்ததால், புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. “இந்தப் புதிய மேம்பாலம், வடக்கு பீகார் (பெகு ராய்), சுபாவுல், மதுபனி, புர்னியா, அராரியா) – தெற்கு பீகார் (ஷேக் புராடு நவாடா, லக்கிசராய்) இடையே கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கான 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான பயண தூரத்தைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.” அதாவது, வடக்கு பீகாரையும், தெற்கு பீகாரையும் இணைக்கும் இந்த மேம்பாலம் கனரக வாகனங்கள் செல்வதற்கு 100 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கிறது. இதனால் நேரம் மிச்சமாகும்.
“இந்தப் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், கனரக வாகனங்களின் நீண்ட தூர பயணத்தைக் குறைக்கும் வகையிலும் இந்தப் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். கனரக வாகனங்கள் நீண்ட தூரம் செல்வதை தவிர்க்கலாம்.
பக்தியர்பூர் – மொகாமா இடையே, தேசிய நெடுஞ்சாலை 31-ல் ரூ.1,900 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தச் சாலை இப்பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதுடன் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிய பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கவும் உதவிடும். பீகாரில் மின்சாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையில், ரூ.6,880 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பக்சர் அணுமின் நிலையத்தை (660 மெகாவாட்) பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது மின் உற்பத்தித் திறனைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்துவதுடன் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், அப்பகுதிகளில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
சுகாதார உள்கட்டமைப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், முசாஃபர்பூரில், ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைக்கிறார். தூய்மை இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கங்கை நதியில், தூய்மையைப் பராமரிப்பது மற்றும் தண்ணீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யும் வகையிலும், அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ரூ.520 கோடி செலவில், நமாமி கங்கா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவுநீர்ப் பாதைகளுக்கான கட்டுமானப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூ.1,260 கோடி செலவிலான நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இரண்டு புதிய ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 12,000 கிராமப்புற பயனாளிகளுக்கும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 4,260 பயனாளிகளுக்கும் புதிய வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |