உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

உல​கம் முழு​வதும் இந்​திய மின்​சார கார்​கள் கோலோச்​சும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

குஜ​ராத்​தின் ஹன்​சல்​பூரில் மாருதி நிறு​வனத்​தின் ஆலை அமைந்​துள்​ளது. இது 640 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. அங்கு இ-வி​டாரா மின்​சார கார் உற்​பத்தி தொடங்​கப்​பட்டு உள்​ளது. ஹன்​சல்​பூர் ஆலை​யில் தயாரிக்​கப்​பட்ட முதல் இ-வி​டாரா மின்​சார காரை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.

இதன்​பிறகு நடை​பெற்ற கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் தயாரிப்​போம், உலகத்​துக்​காக தயாரிப்​போம் என்ற திட்​டத்​தில் முக்​கிய மைல்​கல்லை நாம் எட்டி உள்​ளோம். இந்த ஆலை இந்​தி​யா, ஜப்​பான் இடையி​லான நட்​புற​வின் சின்​ன​மாக விளங்​கு​கிறது. இப்​போது உலகத்​தின் பல்​வேறு நாடு​களில் ஓடும் மின்​சார கார்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்​டவை ஆகும். இதில் மிகுந்த பெரு​மிதம் கொள்​கிறேன். ஹன்​சல்​பூர் மாருதி சுசூகி ஆலை​யில் தயாரிக்​கப்​படும் இ-வி​டாரா கார் உலகம் முழு​வதும் 100 நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்பட உள்​ளது. விரை​வில் உலகம் முழு​வதும் இந்​திய மின்​சார கார்​கள் கோலோச்​சும்.

மின்​சார கார் உற்​பத்​திக்கு தேவை​யான பேட்​டரி​கள் இப்​போது உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​படு​கிறது. குறிப்​பாக ஹன்​சல்​பூர் மாருதி சுசூகி ஆலை​யிலேயே ஹைபிரிட் பேட்​டரி உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. பழைய பெட்​ரோல், டீசல் வாக​னங்​கள், ஆம்​புலன்​ஸ்​களை ஹைபிரிட் மின்​சார வாக​னங்​களாக மாற்​றும் தொழில்​நுட்​பத்தை உரு​வாக்​கு​மாறு மாருதி சுசூகி நிறு​வனத்தை கேட்​டுக் கொண்​டேன். இதை சவாலாக ஏற்று 6 மாதங்​களில் ஹைபிரிட் மின்​சார ஆம்​புலன்ஸ் வாக​னத்​துக்​கான மாதிரியை அந்த நிறு​வனம் வடிவ​மைத்து உள்​ளது. நாடு முழு​வதும் ஓடும் பழைய வாக​னங்​கள், ஹைபிரிட் மின்​சார வாக​னங்​களாக மாற்​றப்​பட்​டால் காற்று மாசு கணிச​மாக குறை​யும்.

மின்​சார ஆம்​புலன்ஸ் வாக​னங்​களுக்​காக பிஎம் இ-டிரைவ் திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இந்த திட்​டத்​துக்​காக ரூ.11,000 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு உள்​ளது. அடுத்த கட்​ட​மாக செமி கண்​டக்​டர் துறை​யில் அதிதீ​விர கவனம் செலுத்தி வரு​கிறோம். நாடு முழு​வதும் 6 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரிக்​கப்​படும். செமி கண்​டக்​டர் துறை​யிலும் இந்​தியா சாதனை படைக்​கும். அந்​நிய முதலீட்​டாளர்​களை ஈர்ப்​ப​தில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்​டும். அப்​போது​தான் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற இலக்கை எட்​டிப் பிடிக்க முடி​யும்.

உள்​நாட்​டுப் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறேன். இதுதொடர்​பாக இப்​போது தெளி​வான விளக்​கத்தை அளிக்க விரும்​பு​கிறேன். ஜப்​பானிய நிறு​வனங்​கள் சார்​பில் இந்​தி​யா​வில் கார்​கள் உள்​ளிட்ட பல்​வேறு பொருட்​கள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. அந்த பொருட்​களும் இந்​திய தயாரிப்​பு​கள்​தான். அவை இந்​திய மண்​ணில், இந்​தி​யர்​களின் கடின உழைப்​பு, வியர்​வை​யால் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. அவை 100 சதவீதம் உள்​நாட்​டுப் பொருட்​கள் ஆகும்.

ஜப்​பானை சேர்ந்த சுசூகி நிறு​வனம், இந்​தி​யா​வின் சர்​வ​தேச தூத​ராக செயல்​பட்டு வரு​கிறது. அந்த நிறு​வனத்​துக்கு மனதார பாராட்​டு​களை தெரி​வித்து கொள்​கிறேன். விரை​வில் ஜப்​பானில் அரசு முறை பயணம் மேற்​கொள்ள உள்​ளேன். அப்​போது இந்​திய, ஜப்​பான் உறவு மேலும் வலுப்​படும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

குஜ​ராத்​தின் ஹன்​சல்​பூர் ஆலை​யில் மாருதி நிறு​வனம் ரூ.21,000 கோடியை முதலீடு செய்​துள்​ளது. இந்த ஆலை​யில் ஓராண்​டில் 7.5 லட்​சம் கார்​களை உற்​பத்தி செய்ய முடி​யும். வரும் 2026-ம் ஆண்​டில் ஹன்​சல்​பூர் ஆலை​யில்​ 67,000 இ-வி​டா​ரா மின்​சா​ர கார்​களை தயாரிக்​க இலக்​கு நிர்​ணயிக்​கப்​பட்​டு இருக்​கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...