உள்நாட்டு பொருட்களை ஊக்குவித்தல் அவசியம்; வரி விவகாரத்தில் மோகன் பகவத் வலியுறுத்தல்

நாடுகளுக்கு இடையே எந்தவித அழுத்தமும் இல்லாத வர்த்தகம் தேவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். மேலும், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீதம் வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், நாடுகளுக்கு இடையே எந்தவித அழுத்தமும் இல்லாத வர்த்தகம் தேவை என்று வரிவிதிப்பு விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸின் 100 ஆண்டுகள் நிறைவு நாளையொட்டி, 3 நாட்கள் நடந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் அவர் கூறியிருப்பதாவது; அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டும். மற்ற அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

சர்வதேச வர்த்தகம் தொடர வேண்டும். ஆனால், அது அழுத்தம் இல்லாமலும், தன்னார்வத்துடனும் நடத்தப்பட வேண்டும். அதனால்தான் நாம் உள்நாட்டு பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். நாட்டின் வணிகக் கொள்கை கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல, தன்னார்வ ஒத்துழைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

சுதேசியாக இருப்பது என்பது இறக்குமதியை நிறுத்துவது அல்ல. உலகம் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதால் நகர்கிறது. எனவே ஏற்றுமதி,இறக்குமதி தொடர வேண்டும். இருப்பினும், அதில் எந்த அழுத்தமும் இருக்கக்கூடாது.

சுதேசி என்பது வெளிநாட்டு பொருட்களை முழுமையாக நிராகரிப்பது அல்ல. மக்களை உள்நாட்டு மற்றும் கிராமப்புறங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு பழக்க வேண்டும். நாம் வீட்டில் எலுமிச்சைப் பழ ஜூஸ் தயாரிக்க முடிந்தால், கோகா-கோலாவை ஏன் வாங்க வேண்டும்? வெளியில் இருந்து பொருட்களைக் கொண்டு வருவது உள்ளூர் வியாபாரிகளை பாதிக்கிறது. உங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் எதையும் வெளியில் இருந்து இறக்குமதி செய்ய தேவையில்லை. வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது, நம் நாட்டில் தயாரிக்கப்படாததைத் தான் நாம் இறக்குமதி செய்வோம், எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...