ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுக்கு புதிய ஊக்கம்

கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கி வைத்தார்.
மத்திய கலாச்சார அமைச்சகத்தால் விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில், பிரதமர் கலந்து கொண்டு கண்காட்சியையும் பார்வையிட்டார்.இந்த மாநாட்டின் நோக்கம், இந்தியாவின் விரிவான கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்தில் அதை ஒரு முக்கிய அங்கமாக நிலைநிறுத்தவும் உத்திகளை ஆராய்வதுதான்.

இந்தியாவின் அறிவு பாரம்பரியத்தைக் கையெழுத்துப் பிரதி மரபு மூலம் மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த மூன்று நாள் மாநாடு, அறிஞர்கள், பாதுகாவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கையெழுத்துப் பிரதி சேகரிப்பு ஒரு நாகரிகப் பொக்கிஷம் என்று பாராட்டினார்.
“இந்திய அறிவு மரபு, பாதுகாப்பு, புதுமை, சேர்த்தல் மற்றும் தழுவல் ஆகிய நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் கலாச்சார அடையாளம், நவீன தேசங்களின் கருத்துக்களையும் தாண்டியது.” என்றும் அவர் கூறினார்.

பண்டைய கையெழுத்துப் பிரதிகள் 80 மொழிகளில் இருப்பதாகவும், அவை வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் தத்துவத்தைப் பிரதிபலிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

“கணிதம் முதல் கணினி அறிவியல் வரை, நவீன அறிவின் அடித்தளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பூஜ்யம் போன்ற பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்த மாபெரும் கையெழுத்துப் பிரதி சேகரிப்பு, இந்தியாவிற்கு ஒரு இணையற்ற பெருமையைத் தருகிறது.” என்று மேலும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...