உலகின் மிக பெரிய கட்சியாக பாஜக இருப்பதாக ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
விசாகப் பட்டினத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகபெரிய அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது. இந்தியாவில் 20 மாநிலங்களில் தேசியஜனநாயகக் கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பாஜக அரசும் உள்ளன. பாஜகதான், நாட்டின் மிகப் பெரிய பிரதிநிதித்துவக் கட்சி.
மக்களவையில் 240 எம்.பி.க்கள் உள்ளனர். பாஜகவில் சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள், 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் செயல்திறன் மற்றும் பொறுப்புள்ள அரசு அமைந்துள்ளது.
ஆனால், முந்தைய அரசு வளர்ச்சிப்பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அவர்களின் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மறந்து விட்டனர். குடும்ப அடிப்படையிலான அரசியல், ஊழல், சமாதானம் ஆகியவைதான் இருந்தன என்று தெரிவித்தார்.
தொடர்ந்துபேசிய ஜெ.பி. நட்டா, ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ. 15,000 கோடியை வழங்கியுள்ள தாகவும் கூறினார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |