வாக்குத்திருட்டில் ஈடுபட்டுதான் காங்கிரஸ் வெற்றிபெற்றதா

கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில், வாக்குத்திருட்டில் ஈடுபட்டுதான் காங்கிரஸ் 2023 பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதா என்று பாஜக எம்.பி. அனுராக்தாக்குர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் ஆலந்துதொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக ராகுல் குற்றம்சாட்டிய நிலையில், பாஜக இந்தகேள்வியை எழுப்பியிருக்கிறது.

இன்று காலை புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கர்நாடகமாநிலம் ஆலந்து தொகுதியில் நடந்த வாக்குத் திருட்டு குறித்து சான்றுகளுடன் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்துப்பேசிய அனுராக் தாக்குர், ராகுல் சொன்னது போல, ஹைட்ரஜன் குண்டை, அவர் தன்மீதே போட்டுக்கொண்டுள்ளார் என்றும், தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் வென்றுள்ளார். எனவே, காங்கிரஸ்கட்சி வாக்குத் திருட்டில் ஈடுபட்டுத்தான் வெற்றி பெற்றுள்ளதா? என அனுராக் தாக்குர் கேட்டுள்ளார்.

ராகுல் காந்தி, செய்தியாளர் சந்திப்பின்போது, தான் ஜனநாயகத்தைக் காக்க இங்குஇல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார், காப்பது அவரது இலக்கு இல்லையென்றால் அழிப்பதுதான் இலக்கா? டூல்கிட் உதவியோடு, அவர் நமது அரசியலமைப்பை தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...