மோடியின் தீபாவளி பரிசு.. அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0! சர்ரென சரியும் பொருட்கள் விலை! முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தீபாவளி பண்டிகை பரிசாக பொதுமக்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. இன்று (செப்டம்பர் 22, 2025) முதல், ஜிஎஸ்டி 2.0 எனப்படும் புதிய வரி அமைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, புதிய வரிவிதிப்பு முறையால் இன்று முதல் விலை குறையும் பொருட்கள், விலை அதிகரிக்கும் பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

ஜிஎஸ்டி வரி முறையானது முதன்முதலில் 2017-ல் அமல்படுத்தப்பட்டபோது, 0 முதல் 28 சதவீதம் வரை பல்வேறு படிநிலைகளில் வரிகள் விதிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் அது மிகுந்த சிக்கல்களை உருவாக்கியது. பொதுமக்களுக்கு விலைகள் பற்றிய தெளிவு இல்லாமல் போனது.

அதேபோல், தொழில்துறைகளும் வரி கணக்கிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டன. இதை சீர்செய்யும் நோக்கில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் பெரிய மாற்றத்தை அறிவித்தது.

இதுவரை நடைமுறையில் இருந்த நான்கு வகை ஜிஎஸ்டி வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, இனி மூன்று பிரிவுகளாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் மூலம் வரி கணக்கிடுவது எளிமையாகும். மேலும் பல துறைகள், இந்தச் சலுகைகளை நுகர்வோருக்கே கொண்டு செல்லும் வகையில் விலை குறைப்புகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய சூழலில், 5% வரிக்குள் அத்தியாவசியப் பொருட்களும்,18% பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 40% வரி விகிதத்தில், புகையிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் கேமிங் போன்றவை அடக்கப்பட்டுள்ளன. Also Read

இந்நிலையில், புதிய வரிவிதிப்பு முறையால் இன்று முதல் விலை குறையும் பொருட்கள், விலை அதிகரிக்கும் பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம். அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி 12%ல் இருந்து, 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேஸ்ட், சோப்பு, ஷாம்பு, பிஸ்கட், ஸ்நாக்ஸ், ஜூஸ், நெய், கன்டென்ஸ்டு பால் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்கள், மிதிவண்டிகள், எழுதுப்பொருட்கள், குறைந்த விலை ஆடைகள் மற்றும் காலணிகளின் ஆகியவற்றில் விலை குறையவுள்ளது.

மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைந்துள்ள நிலையில், ஏர் கண்டிஷனர், ஃப்ரிட்ஜ், டிஷ்வாஷர், பெரிய திரை டிவிகள், சிமெண்டு ஆகியவற்றின் விலை குறையும், ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, சிறிய கார்கள் (1200cc-க்கு குறைவான எஞ்சின்) மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறையும். ஆனால் பெரிய கார்கள் மற்றும் சொகுசு எஸ்யூவிகள் முந்தைய உயர் வரியிலேயே தொடரும். இதே போல், காப்பீடு மற்றும் நிதிச் சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. Recommended For You

புகையிலை பொருட்கள், மதுபானம், பான் மசாலா, ஆன்லைன் பந்தயம் மற்றும் கேமிங் பிளாட்ஃபார்ம்கள் என இவை அனைத்தும் 40% உயர் வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால், விலை அதிகரிக்கிறது. எரிபொருட்கள் இன்னும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படாததால், அதின் விலையில் மாற்றமில்லை. வைரங்கள், விலையுயர்ந்த கற்கள் போன்ற ஆபரணங்களும் பழைய வரியிலேயே தொடரும். ஜிஎஸ்டி 2.0 மூலம் பொதுமக்களுக்கு நிவாரணமும், அரசுக்கு வருவாயும் ஒரே நேரத்தில் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவதால், மக்களுக்கு செலவு குறையும். அதே சமயம், புகையிலை, மது போன்றவற்றுக்கு அதிக வரி விதிப்பதால் அரசு வருவாய் நிலையாக கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...