பிரதமர் மோடியுடனான தனது உறவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 24 ஆண்டுகளில் ஒரு முறை கூட வேலையில் இருந்து விடுப்பு எடுக்காத ஒரே நபர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தொடர்ந்து நாட்டுகாக உழைப்பதில் அவரது ஆற்றல் (எனர்ஜி )தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். பிரதமர் மோடியிடம் ஆற்றல் குறையும் (எனர்ஜி ) என்ற கேள்விக்கே இடமில்லை.
தற்பொழுது அவரது ஆற்றல் இன்னும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடுமையான இலக்குகள் நிர்ணயித்து பணியாற்றி வருகிறார்.அப்போது பிரதமர் மோடியை ஓய்வெடுக்குமாறு எப்போதாவது அறிவுறுத்தியுள்ளீர்களா என்று கேட்டபோது, தொடர்ச்சியான வேலை இருக்கிறது. பிரதமரின் முடிவுகளிலோ அல்லது பணியின் வேகத்திலோ ஒருபோதும் எந்த ஓய்வோ அல்லது சோர்வ்வோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை என்று அமித்ஷா கூறினார்.
மோடி மிகவும் பிரபலமான பிரதமர்
தொடர்ந்து பேசிய அவர் யாரும் யார் மீதும் எதையும் திணிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இயல்பு உண்டு, அதன்படி அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.பிரதமர் மோடி மிகவும் பிரபலமான பிரதமர் என்றும், குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது அல்லது நாட்டின் பிரதமராக இருந்தபோது நீண்ட காலம் பதவியில் இருந்தவர் என்றும் முழு நாடு மட்டுமல்ல, உலகமே கூட நம்புகிறது .இதற்கு எல்லாம் வருடைய எனர்ஜீ மற்றும் ஒத்துழைப்பு தான் காரணம் என்று அமித்ஷா கூறினார்.
மேலும் பிரதமர் மோடியால் மட்டுமே அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க முடியும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியும். அவரது எதிரிகள் என்ன சொன்னாலும், அவர் எப்போதும் தனது சக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகளின் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு வழிகாட்டுவதை நான் பார்த்திருக்கிறேன் என்று அமித்ஷா கூறினார்.
2047 ஆம் ஆண்டுக்குள் இதுதான் இலக்கு
தொடர்ந்து பல கட்சிகளின் முன்னிலையில், பாஜக நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்கு ஏற்ற வகையில் பிரதமர் மோடி தன்னைத் திறமையாக வடிவமைத்துக் கொண்டதாக நான் நினைக்கிறேன். அதனால்தான் அவர் மக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்று அமித்ஷா கூறினார். பிரதமர் மோடியுடனான தனது உறவு ஒரு தலைவர் மற்றும் ஒரு தொழிலாளி போன்றது என்றும், கட்சியில் “முதலாளி கலாச்சாரம்” இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
பிரதமர் மோடியின் கீழ், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த, தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையை பாஜக வகுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். 2047 ல் நாங்கள் அங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாடு அங்கே இருக்கும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்போம். நாங்கள் நாடாளுமன்றத்தை அவமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார். முன்னதாக செப்டம்பர் 18 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 75 வது பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |