நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார்.

இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் 4 கோடி ஏழை குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. இந்த திட்​டத்​தில் ஒடி​சா​வில் மட்​டும் 40,000 ஏழை குடும்​பங்​கள் பயன் பெற்​றுள்​ளன. ஒடி​சா​வில் புதி​தாக 2 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்க மத்​திய அரசு அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கியது. இதன்​மூலம் ஒடிசா இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

கப்​பல் கட்​டு​மான திட்​டத்​துக்​காக மத்​திய அரசு சார்​பில் அண்​மை​யில் ரூ.70,000 கோடி திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் ஒடி​சா​வில் கப்​பல் கட்​டு​மான தளம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் ஏராள​மான இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். மத்​தி​யிலும் நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் காங்​கிரஸ் கட்​சி, நாட்டை கொள்​ளை​யடித்து வந்​தது. கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக ஆட்சி அமைக்க மக்​கள் வாய்ப்பு வழங்​கினர். இதன் மூலம் காங்​கிரஸின் கொள்ளை தடுத்து நிறுத்​தப்​பட்​டது.

கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அத்​தி​யா​வசிய பொருட்​கள் மீது அதிக வரி விதிக்​கப்​பட்​டது. உதா​ரண​மாக ஒரு குடும்​பத்​தில் ஓராண்​டுக்கு ரூ.1 லட்​சம் செலவு செய்​தால், ரூ.25,000 வரி செலுத்த வேண்​டிய சூழல் இருந்​தது. பாஜக ஆட்​சிக் காலத்​தில் இந்த வரி ரூ.5,000 ஆக குறைந்​திருக்​கிறது. இதன்​மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்​கள் மிகுந்த பலன் அடைந்​துள்​ளனர்.

காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மக்​களின் பணம் கொள்​ளை​யடிக்​கப்​படு​கிறது. எனவே காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளிடம்​ இருந்​து பொது​ மக்​கள்​ வில​கி இருப்​பது நல்​லது. திருப்பதி, பாலக்காடு உள்ளிட்ட 8 ஐஐடிகளில் ரூ.11,000 கோடி யில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஐஐடிகளில் கூடுதலாக 10,000 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர தெரிவித்தார். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...