மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்பட்டால் அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும்; ராஜ்நாத் சிங் பேச்சு

‘மத்திய அரசும் மாநில அரசுகளும் கைகோர்த்துச் செல்லும்போது, அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும். அப்போது சாத்தியமற்ற விஷயங்கள் கூட சாத்தியமாகும்’ என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீனர்கள் நலனுக்கான தேசிய மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இது போன்ற நிகழ்வு முதன்முறையாக நடத்தப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. முன்னாள் ராணுவ வீரர்களையும் வாழ்த்துகிறேன். எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

முன்னாள் ராணுவ வீரர்கள் நலனுக்கானது. மாநில அரசுகளும் அவர்களுக்கான திட்டங்களைக் கொண்டு வருகின்றன. மாநாட்டின் நோக்கம் இதுதான். மத்திய அரசும் மாநில அரசுகளும் கைகோர்த்துச் செல்லும்போது, அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும். அப்போது சாத்தியமற்ற விஷயங்கள் கூட சாத்தியமாகும்.

மிகப்பெரிய சமீபத்திய உதாரணம் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் செய்து மத்திய அரசு ஒரு மைல் கல்லை அடைந்துள்ளது. இது ஒருமித்த கருத்து காரணமாக நடந்தது. இது மட்டுமல்ல, கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை நினைவில் கொள்ளுங்கள். மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் கிடைக்க ஏற்பாடு செய்தது. மாநில அரசுகள் அவற்றை எல்லா மூலைகளுக்கும் கொண்டு சென்றது. இது பரஸ்பர ஒருங்கிணைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு, இதன் விளைவாக, தடுப்பூசி திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக இருந்தது.

ஸ்வச் பாரத் மிஷன், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டங்களிலும் இதேதான். மாநில அரசுகளின் உதவியுடன் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.நாம் ஒத்துழைப்புடன் செயல்பட்டால், மக்கள் தானாகவே பயனடைவார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. எனவே, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்த மாநாட்டில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...