விவசாயிகள் சுதேசி (பூர்வீக) பொருள்களை பயன்படுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசி (பூர்வீக) பொருள்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்றவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

மகாராஷ்டிரம் மாநிலம் அஹில்யா நகர் மாவட்டத்தில் பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் மற்றும் பத்மபூஷன் டாக்டர் பாலாசாகேப் விக்கே பாட்டீல் ஆகியோரின் சிலைகளை ஞாயிற்றுக்கிழமை அமித்ஷா திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

உலகில் உள்ள அனைவரும் தங்கள் பொருள்களைத்தயாரிக்க இந்தியா வந்தாக வேண்டும். ஏனெனில் 140 கோடி நுகா்வோரை கொண்டசந்தையாக இந்தியா உள்ளது. எனவே, நாட்டுமக்கள் அனைவரும் எந்தவொரு வெளிநாட்டுப் பொருளும் நமது வீடுகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கமால் இந்திய பொருள்களை மட்டுமே பயன் படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக உயர்த்தும். ஏற்கனவே உலகின் மூன்றாவது பெரியபொருளாதார நாடு என்ற நிலைக்கு நாடுமுன்னேறி வருவதாகவும், உலகளவில் முதன்மையான இடத்தை அடைவதற்கு சுதேசி பொருள்களைப் பயன்படுத்துவதற்கு உறுதியான அர்ப்பணிப்பு தேவை என்றார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசிபொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்றவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராவில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு சரியானநேரத்தில் உதவிவழங்கும் என்றும் உறுதியளித்த அமித் ஷா, மாநிலத்தின் மழைபாதிப்பு குறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்கள் ஏக்நாத்ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் தன்னை சந்தித்து விளக்கியதாகவும், சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநிலஅரசிடம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்லதாக அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...