சுயசார்பு பாரத கனவு எட்டும் தொலைவில்தான் உள்ளது

நமது சுயசார்பு பாரதக்கனவும் எட்டும் தொலைவில்தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வேலை வாய்ப்பைப் பெருக்கும் விதமாக நமது பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ரூ.5,532 கோடி முதலீட்டில் 7 திட்டங்களுக்கு ஒப்புதல்அளித்துள்ளது வரவேற்பிற்குரியது.

அதிலும் 5 திட்டங்கள் மூலம், 77% முதலீட்டை தமிழகத்திற்கு மத்தியஅரசு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சிய ளிப்பதோடு, தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது நமது மத்தியஅரசு கொண்டுள்ள அபரிமிதமான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. சுமார் ரூ.4,200 கோடி முதலீட்டின் மூலம் பல்லாயிரக் கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு தமிழகத்தின் மின்னணுபொருட்கள் உற்பத்தியில் வீறுநடையிட வழிவகுத்துள்ள நமது பிரதமர் மோடி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாகத் திகழும் நமது மத்தியமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றும் இத்தகைய திறன் மிக்க மத்திய அரசினால் மின்னணு உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கும்நாளும், நமது சுயசார்பு பாரதக் கனவும் எட்டும் தொலைவில்தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. என தெரிவித்துள்ளார் .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...