நான் ஏன் பழி ஏற்கவேண்டும்?

நாடு முழுவதும் பலபகுதிகளில் இருக்கும் மோசமான சாலை மற்றும் நெடுஞ்சாலை நிலை குறித்து நெட்டிசன்கள் சமூகஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பேசுகையில், அனைத்து திட்டங்களிலும் வெளிப்படைதன்மை மற்றும் செயல் திறன் சார்ந்த பொறுப்புணர்வை உறுதிசெய்ய கடும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

இதன் ஒருபகுதியாக சாலைகள்/நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தில் ஈடுபட்ட/தொடர்புடைய நபர்களின் விவரங்கள் விரைவில் பொதுவில் வெளியிடபடும் என்று கூறி உள்ளார். மேலும், அனைத்து சாலைத் திட்டங்களும் தரம் மற்றும் விபத்துதரவுகளின் அடிப்படையில் செயல்திறன் தணிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சாலைகள் தேசியசொத்துக்கள், அவற்றை அமைப்பவர்கள் அல்லது நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) புது டெல்லியில் ஏற்பாடுசெய்திருந்த ஸ்மார்ட் சாலைகள் மாநாடு 2025-ல் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நாடுமுழுவதும் சாலைகள் சரியில்லாமல் இருப்பதற்கு நான் ஏன் பழியை ஏற்கவேண்டும்? சாலை ஒப்பந்ததாரர், பொறியாளர் மற்றும் செயலாளர் விவரங்கள் பொதுமக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்படும்” என்றார். “ஒப்பந்ததாரர்கள் செய்யும்தவறுகளுக்கு எப்போதும் நான் ஏன் பழியை ஏற்கவேண்டும் என்றும், மோசமான சாலை வேலைகளை ஒப்பந்தம் எடுத்துவிட்டு மோசமாக செயல்படுபவர்கள் அம்பலப் படுத்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

“அரசு எடுக்க உள்ள நடவடிக்கை காரணமாக அமைச்சர், செயலாளர், ஒப்பந்ததாரர், நிர்வாக பொறியாளர் ஆகியோரின் விவரங்கள் மற்றும் அவர்களின் தொலை பேசி எண்களை பொதுமக்கள் பெறுவார்கள். இது பொதுமக்களுக்கு விவரங்கள் கிடைக்க வழிசெய்யும், மேலும் மோசமான வேலைகளைச் செய்பவர்கள் அம்பலப்படுத்தப் படுவார்கள்” என்று நிதின் கட்கரி கூறினார்.

“ஊடகங்கள் ஏன் எப்போதும் என்மீது பழிசுமத்தி எனது புகைப் படத்தை வெளியிட வேண்டும்? ஒப்பந்ததாரர், செயலாளர் ஆகியோரின் புகைப்படத்தை வெளியிடுங்கள், நான் ஏன்பழியை ஏற்றுக்கொண்டு சமூக ஊடகங்களில் பதிலளிக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பினார். “உள்கட்டமைப்பு மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கவேண்டும், குடிமக்களுக்கு வசதியை உறுதிசெய்ய வேண்டும். இதை ஆதரிக்க, பயணிகளுக்கு உணவு, எரிபொருள், ஓய்வறைகள் மற்றும் பார்க்கிங் போன்ற அத்தியாவசிய சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் 670 சாலையோர வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...