சாதாரண பின்னணியில் இருந்து குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் உயர்ந்தது ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்றுகாலை தொடங்கியது. குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நடைபெறும் கூட்டத் தொடர் என்பதால் மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திரமோடி குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், விவசாயி மகன் சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று குடியரசு துணைத் தலைவராக உயர்ந்துள்ளார். நாட்டிற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிதுள்ளவர் என்று புகழாரம் சூட்டினார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் மரியாதையைப் பேணுவார்கள் என்று நான்உங்களுக்கு இங்கே உறுதியளிக்கிறேன்.
எங்கள் தலைவர் ஒரு எளிய குடும்பத்திலிருந்து, ஒருவிவசாய குடும்பத்திலிருந்து வந்தவர், மேலும் அவர் தனது முழுவாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல்தான் இதற்கான ஒருஅம்சமாக இருந்து வருகிறது, ஆனால் அவரது முக்கிய நோக்கம் சமூகசேவையாக இருந்து வருகிறது. அவர் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். சமூகசேவையில் ஆர்வமுள்ள நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்று மோடி கூறினார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |