மோடி எந்த அழுத்தத்திற்கும் அடிபணிந்ததில்லை

இந்திய பயணத்திற்கு முன்பாக மாஸ்கோவில் ஆங்கிலசெய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வர்த்தகவரிகளை விதிப்பதாக தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சாஎண்ணெய் வாங்குவது குறித்த டிரம்பின் விமர்சனத்திற்கு பதிலளித்தவர், அமெரிக்காவே அதன்சொந்த அணுமின் நிலையங்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி பொருட்களை வாங்கிவரும் நிலையில், இந்தியாவிற்கும் அதேசலுகை அளிப்பதில் என்ன தவறு என்று வினவினார்.

இந்தியா – ரஷ்யா இணைந்து செயல்படுவது அமெரிக்கா உட்பட எந்தநாட்டிற்கும் எதிரானது அல்ல என்று விளக்கமளித்த புதின், தானும், பிரதமர் மோடியும் எந்தவித வெளிப்புற அழுத்தத்திற்கும் அடிபணிந்ததில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது சொந்தநலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், எந்தநாட்டிற்கும் தீங்கு இழைக்க மாட்டோம் என்றும் புதின் கூறினார். இந்நிலையில், புதினின் இந்திய பயணத்தை வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவு இருநாட்டு மக்களுக்கும் மகத்தான நன்மைகளை கொடுத்திருப்பதாக ரஷ்ய மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு செல்லும் புதின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.

அப்போது ராணுவம், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகிறது. ரஷ்யாவுடனான வர்த்தக பற்றாக்குறையை களையும் வகையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மருந்து, ஆட்டோமொபைல், வேளாண்பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...