திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள தீபதூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கும் நிலையில், சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டிருக்கிறது. இந்த முயற்சி தோல்வியில் முடியும் என்று பாஜக அண்ணாமலை கூறியுள்ளார். இது ஓரளவு உண்மைதான் என்றும், ஆனால் திமுகவின் திட்டம்வேறு எனவும் உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.
நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்காக இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். நீதிபதி கொடுத்த தீர்ப்பு திமுகவுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தற்போது இந்தியா கூட்டணி எம்பிக்களிடம் கையெழுத்துவேட்டையை திமுக தொடங்கியுள்ளது. இந்த முயற்சி தோல்வியில்தான் முடியும்” என்று கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனில், மக்களவையில் குறைந்தது 100 எம்பிக்களின் ஆதரவு இருக்க வேண்டும். இல்லையெனில் மாநிலங்களவையில் 50 எம்பிக்கள் கையெழுத்துபோட்டு கொடுக்க வேண்டும். இப்படி சப்போர்ட் கிடைத்தாலும் நீதிபதியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட முடியாது. பதவி நீக்கம் தீர்மானம் கொண்டுவருவதற்காகத்தான் இந்தஆதரவு அவசியம். தீர்மானம் கொண்டு வந்த பின்னர் அதை மூன்று பேர் கொண்ட குழு விசாரிக்கும்.
விசாரணை முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், 3ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவுதெரிவித்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியில் அவர்தான் பதவிநீக்கம் செய்வார். இப்படித்தான் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும்.
மக்களவையில் இந்தியா கூட்டணியின் எம்பிக்களின் எண்ணிக்கை 235. மூன்றில் இரண்டுபங்கை விட இது குறைவு. 362 எம்பிக்கள் இருந்தால்தான் அது 3ல் 2 பங்கு என்று கருதமுடியும். எனவே தீர்மானம் கொண்டு வந்தாலும் வாக்கெடுப்பில் நிச்சயம் தீர்மானம் தோல்வியடைந்து விடும். இதைத்தான் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |