தங்கத்தை இழந்து நிற்கும் ரஷ்ய

போர் என்பது சாதாரணமானது அல்ல. அது ரஷ்யாவுக்கும் சரி, அமெரிக்காவுக்கும் சரி, சோமாலியாவுக்கும் சரி போரில் ஈடுபடும் நாடு மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்பதில் மாற்றமில்லை. உதாரணம் ரஷ்யாவை எடுத்துக் கொள்வோம்
மிகப்பெரிய வல்லரசு நாடு. ஆனால் உக்கரைன் போரில் தன் நாட்டில் தங்கத்தை எல்லாம் இழுந்து நிற்கிறது
ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு முன் மே 2022-ல் 554.9 மெட்ரிக் டன் ஆக இருந்த தங்க இருப்பு, ஜனவரி 2025 நிலவரப்படி வெறும் 160.2 மெட்ரிக் டன் ஆக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் உக்ரைன் போர்ச் செலவுகள், பட்ஜெட் பற்றாக்குறை, அரசு வங்கிகளை முட்டுக் கொடுத்து நிறுத்துதல் மற்றும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் குறைந்ததால், ஒரு நாளைக்கு சுமார் 12.8 பில்லியன் ரூபிள் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை ரஷ்யா மிக வேகமாக விற்பனை செய்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், தங்கம் மட்டுமே அவர்களுக்கு கைவசம் இருந்த “அவசரக்கால நிதி” ஆகும். ஆனால், தற்போது அந்த இருப்பும் மிக வேகமாக கரைந்து வருவது ரஷ்ய பொருளாதாரத்திற்கு நீண்டகால சிக்கல்களை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா எதனால் தங்கத்தை சேகரித்து வருகிறது என்பது இப்போது புரிகிறதா ? நாம் ஏன் பாகிஸ்தானுடன் போர் செய்ய தயக்கம் காட்டி வருகிறோம் என்பது புரிகிறதா ? சீனா ஏன் போர் செய்ய தயங்குகிறது என்று தெரிகிறதா.

நாமெல்லாம் சாதாரணமாக சொல்லுவோம் பாகிஸ்தானின் நொறுக்கி எடுத்து இருக்கலாம் அப்படி என்று ஆனால் அதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ரஷ்யாவின் ‘தேசிய நல நிதியத்தில்’ (National Wealth Fund) இருந்த தங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் 71 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது ரஷ்யாவிற்கு ஒரு வகையில் ஆறுதலாக உள்ளது. குறைந்த அளவு தங்கம் இருந்தாலும் அதன் மதிப்பு (டாலர் மதிப்பில்) அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...