பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் மன் கி பாத் எனப்படும் மனதின்குரல் நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மலேசியாவில் இந்தியமொழிகள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய சமூகத்தினரை பாராட்டினார்.
பிரதமர் மோடி பேசும்போது, மலேசியாவில் உள்ள நம்முடைய இந்தியசமூகத்தினர் மெச்சத் தக்க பணிகளை மேற்கொள்கின்றனர். மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், தமிழ் மொழியுடன், பிறபாடங்களும் தமிழில் கற்பிக்கப்படுகின்றன.
அதனுடன், மற்ற இந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் பஞ்சாபி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதேபோன்று மலேசியாவில் துடிப்பான ஒடிசிநடனம் ஆடப்பட்டது. மற்றும் பாவல் இசை இசைக்கப்பட்டது. இவை இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வலுவானகலாசார பிணைப்பை பிரதிபலிக்கிறது என அவற்றையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
கடந்த மாதம், லால் பாத்சேலை அணிந்து மலேசிய இந்திய பாரம்பரிய சமூகம் தனித்துவ நிகழ்ச்சியை நடத்தியது. இதனை குறிப்பிட்ட பிரதமர் மோடி, வங்காள கலாசாரத்துடன் அந்த சேலை ஒருசிறப்பு பிணைப்பை கொண்டது என்று கூறினார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |