கச்சா எண்ணெய் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் பாரதம்

ஈரானில் அமெரிக்காவின் தாக்குதல் உறுதியாகிவிட்டது, ஆனால் இது சதாம் உசேனின் ஈராக் , ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்த நேரடி தலையீடாக அமெரிக்கா புகுந்து கைபற்றும் போராக இருக்காது மாறாக ஈரானின் ஆட்சி  மற்றும் ராணுவநிலைகளை அமெரிக்கா தாக்கும் அப்பின்னணியில் ஈரானிய மக்கள் அல்லது அமெரிக்க சார்பு சக்தி நாட்டை கைபற்ற வேண்டும் இதுதான் இப்போதைய திட்டம்

காரணம் ஈரான் ஒரு மாதிரியான ஆட்களை கொண்ட நாடு,  உதாரணத்துக்கு அங்கிள் சைமன் இல்லாவிட்டால் அக்கட்சி கும்பல் என்னாகும்? யாரால் இவர்களை கட்டி மேய்க்க முடியும்? அப்படி ஈரானில் சரியான தலமை வேண்டும் தனக்கு கட்டுபட்டதாக இருக்கவேண்டும் என அது கருதுகின்றது, இது மக்கள் புரட்சியாக அமையட்டும் என கணக்கிடுகின்றது.

அதே நேர்ம் ஈரான் உடனே சரியாது அது ஆடிவிட்டே அடங்கும், இப்போது ஈரானின் புரட்சிகர ராணுவம் அல் கய்தா, ஐ.எஸ் இயக்கம் போல் தடைவிதிக்கபட்ட இயக்கமாயிற்று இதனால் ஈரானின் கடைசி யுத்தம் இனி துவங்கும். இந்த யுத்தத்தில் மொத்த பலமும் காட்டுவார்கள் சக அராபிய நாடுகளை தாக்குவார்கள், போக்குவரத்து வழிதடங்களை மூடுவார்கள், பெரிய மிரட்டலை செய்வார்கள்.

அமீரகம், சவுதி,கத்தார் என பல நாடுகள் பாதிக்கபடும், இவை எல்லாம் பணக்கார தோற்றம் கொண்ட நாடு என்றாலும் இந்தியா போல பெரும் போரை தாங்கும் வல்லமைஅவர்களுக்கு இல்லை, சில நாட்களுக்கு தாங்கமாட்டார்கள் அழிவும் அதிகமாகும்
இதனால் சவுதி, அமீரகம் ஆகியவை போரை விரும்பவில்லை எனினும் அமெரிக்கா விட்டுவிடபோவதுமில்லை
இங்கு யார் வெல்வார்கள் யார் வீழ்வார்கள் என்பதல்ல விஷயம், இதனால் உருவாகபோவது பெரும் எண்ணெய் தட்டுப்பாடு, பெரும் குழப்பம்.

அன்னார் புட்டீன் விரும்புவதும் இதைத்தான் என்பது. வேறுவிஷயம்
இப்படியான நிலையில் இந்தியா அமெரிக்க ஈரான் போர் மூண்டு எண்ணெய் தட்டுபாடு வந்தால் எப்படி சமாளிப்பது என கடும் ஆலோசனையில் உள்ளது, இன்றைய கணக்கு படி இப்போது போர் மூண்டாலும் மோடி அரசாலா 4 மாதம் இதே விலையில் தட்டுபாடு இன்றி இந்தியாவுக்குள் எண்ணெய் விநியோகத்தை மக்களுக்கு செய்யமுடியும், அவ்வளவு பெரிய அளவில் எண்ணெய் சேமிப்பில் உள்ளது

ஆனால் இது போதும் என ஒரு அரசு இருக்க முடியாது, போர் எவ்வளவு காலமும் நீளலாம் என்பதால் இந்தியா பெரும் மாற்று ஏற்பாட்டை செய்திருக்கின்றது மோடி அரசின் பெரிய ராஜதந்திரம் ஒரே நாட்டிடம் எல்லாவற்றுக்கும் சிக்கியிருப்பது அல்ல, இதனால் எண்ணெய் இறக்குமதியினை அது எல்லா நாடுகளிலும் இருக்கும்படி பார்த்து கொண்டது, அதன்படி வளைகுடா நாடு மட்டுமல்ல, ரஷ்யா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, தென் அமெரிக்கா என பல இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் வரும்படி ஏற்பாடு செய்யபட்டுருக்கின்றது

மோடி அரசின் இன்னொரு முக்கிய வெற்றி உள்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அதிகபடுத்தியது, அது அரச ஆலைகள் அம்பானி போன்றோரின் தனியார் ஆலைகள் என அதிகம், இதனால் எந்த நாட்டின் கச்சா எண்ணெயும் வாங்கி நம்மால் சுத்திகரித்து பயன்படுத்த முடியும்.

போர் மூண்டால் நிச்சயம் பல குழப்பம் வரும், ஆனால் பல நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி இன்றி வாழமுடியாது அதனால் அவை உணவுக்கு எண்ணெய் என கூட இறங்கிவரும் ஆனால் கச்சா எண்ணெய்தான் தரும், அதை தேசம் சுத்திகரிக்கும்
முன்பு இதனால் சிக்கல் இருந்தது ஆனால் மோடி அரசு ஏகபட்ட முன் தயாரிப்புக்களை செய்திருப்பதால் தேசம் பெரிய தட்டுபாட்டை எதிர்கொள்ளாது.

1990களில் வந்த வளைகுடா போரினை தொடர்ந்து இதே நிலை வந்தபோது முந்தைய காங்கிரஸ் அரசு ஒரு தயாரிப்புமின்றி தேசத்தை குழப்பியதும், அடுத்து உணவுக்கு எண்ணெய் என ஈராக்கிடம் வாங்க போய் அதிலும் ஊழல் செய்ததும் வரலாறு
மோடி அரசு அப்படி அல்ல, எல்லா சூழலுக்கும் தயாராக தேசத்தை பலமாக நிறுத்தியிருக்கின்ரது, எந்த நாட்டில் எந்த குழப்பம் என்றாலும் இந்திய தேசம் அதன் போக்கில் இயங்கும், மோடி எனும் மகான் வடிவமைத்து கொடுத்த சக்திவாய்ந்த தேச எந்திரம் அப்படியானது

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்
பிரம்ம ரிஷியார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...