மக்களின் வாழ்வாதாரத்தில் மத்திய பட்ஜெட் மாற்றத்தை ஏற்படுத்தும் – சிவ்ராஜ் சிங் சௌகான்

2026 – 27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் முன்னெப்போதும் இல்லாத, வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று விவரித்துள்ள மத்திய ஊரக மேம்பாடு, வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கான வலுவான அடித்தளமாக இது உள்ளது என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 12-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும், முதலாவது பெண் நிதியமைச்சர் தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ததும் நாட்டிற்கு பெரும் பெருமையளிக்கக் கூடிய அம்சம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை உணர்த்தும் காவியம் என்று அவர் கூறியுள்ளார். தேசிய உறுதிப்பாட்டை நிறைவேற்றக்கூடிய மற்றும் சமூக முன்னேற்றதுக்கான பட்ஜெட் இது என்று அவர் தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சக்திமிக்க பட்ஜெட் இது என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் மூலம் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான, வலிமையான அடித்தளத்தை இந்த பட்ஜெட் அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நான்கு தூண்களான விவசாயிகள், இளையோர், பெண்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து புதிய அத்தியாயத்தை இந்த பட்ஜெட் எழுதியுள்ளதாக திரு சௌகான் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வேளாண்மைத் துறைக்கு ரூ 1.32 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...