அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடலை குறிப்பதுடன் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் பட்ஜெட்டிற்காக ஒவ்வொரு இந்தியரின் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, உற்பத்தி முதல் உட்கட்டமைப்பு வரையும், சுகாதாரம் முதல் சுற்றுலா வரையும், ஊரகப் பகுதி முதல் செயற்கை நுண்ணறிவு வரையும், விளையாட்டுகள் முதல் யாத்திரைத் தலங்கள் வரையும் ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு சிறிய நகரம், ஒவ்வொரு பெரு நகரம் ஆகியவற்றின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கக் கூடிய, கனவுகளை நிறைவேற்றக்கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
நிதி விவேகத்துடன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் கூடிய மோடி அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா பட்ஜெட்டிற்காக தாம் பிரதமர் திரு மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் நிதி பற்றாக்குறையை 4.5 சதவிகிதம் அளவிற்கு குறைவாக நிர்வகிப்பது என்ற இலக்கை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார்.
2026 – 27-ம் ஆண்டு பட்ஜெட் மூலம் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் சொற்றொடராக மட்டுமின்றி மட்டுமல்ல நமது அரசின் உறுதியான தீர்மானமாகவும் உள்ளதுss என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் ஒவ்வொரு துறை, ஒவ்வொரு சமூகம், ஒவ்வொரு மக்களுக்கும் அதிகாரமளிப்பதற்கான தெளிவான வரைவு செயல்திட்டத்தை வழங்குவதோடு மட்டுமின்றி ஒவ்வொரு படியிலும் அவர்களை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் நடைமுறைக்கு உகந்த, கள அளவிலான தொலைநோக்குப் பார்வையையும் இது அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |