நமது நாடும் நமது வீடும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ள மத்திய பட்ஜெட்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களுடனும் வரலாற்று சிறப்புமிக்க வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வழங்கியுள்ள நமது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மூலதனச் செலவு 10% உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனை வளப்படுத்தி, அவர்களுக்கு தரமான சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையிலும் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் இயக்கம் 2.0 திட்டத்திற்காக ரூ.40,000 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பதன் மூலம் வேலைவாய்ப்பும், அந்நிய முதலீடுகளும் பெரிய அளவில் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகமும் பயன்பெற போகிறது.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், ஹைதராபத்திலிருந்து சென்னைக்கும் அதிவேக ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 500 நீர்தேக்கங்கள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறித்துறையை மேம்படுத்தும் மகாத்மா காந்தி கைத்தறித் திட்டம் தமிழ்நாட்டுக்கு பெருமளவு பயனளிக்கும்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிமவளங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.
தென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் தமிழகம் பெருமளவு பயன்பெறும்.
இதுதவிர மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கீழ் கண்ட திட்டங்கள் தமிழகத்துக்கு கூடுதல் பயன் சேர்க்கும்.
ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.
பொதிகை மலையில் மலையேற்றச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் தமிழகம் பயன்பெறும்.
பழவேற்காடு ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 3 இடங்களில் பறவைகளை பார்வையிடும் மையங்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்
முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை எட்டுவதற்கான உறுதியான பாதையை வகுக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மொத்தத்தில் நமது நாடும், நமது தமிழ்நாடும் மிகுந்த பயனடையும் வகையில் சிறப்பான முறையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...