தாய்மொழியின் அவசியத்தை தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது- குடியரசுத்தலைவர்

ஒடிசா மாநிலம் பாலசூரில் ஃபக்கீர் மோகன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அங்கு கட்டப்பட்டுள்ள புதிய அரங்கையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், யாசகாபீ ஃபக்கீர் மோகன் சேனாபதிக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். தாம் மாணவியாக இருந்த காலத்தில் அவரது ரேவதி என்ற காலத்தால் அழியாத கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த ஈர்ப்பு என்றும் அழியாதது என்று அவர் கூறினார். 19-ம் நூற்றாண்டில் ஒரு சிறுமியாக கல்வி கற்க வேண்டும் என்ற அவரது தீர்க்கமான முடிவு மனஉறுதிக்கு ஒரு நீடித்த சான்று என்று அவர் குறிப்பிட்டார். ஊரக பழங்குடியின கிராமத்தில் பயின்ற அவர், தமது உறுதியான நிலைப்பாட்டுடன் புவனேஸ்வர் சென்று தமது உயர் பள்ளிக்கல்வியையும் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தார் என்று அவர் கூறினார். அந்த வகையில் ஃபக்கீர் மோகன் தமக்கு உத்வேகம் அளித்தவர் என்று அவர் தெரிவித்தார்.

தமது தாய்மொழியை மிகவும் நேசிப்பவராக ஃபக்கீர் மோகன் திகழ்ந்தார் என்று குடியரசுத்தலைவர் கூறினார். எனது தாய்மொழி எனக்கு மிகவும் உயர்வானது என்று அவர் எழுதியதாகக் குறிப்பிட்டார். ஒருவர் தமது தாய் மொழியில் கல்வி கற்கும் போது தங்களுடைய சுற்றுப்புறங்கள் கலாச்சாரச் சூழல் ஆகியவற்றில் கல்வியுடன் முறையாக புரிந்து கொள்ள இயலும் என்று அவர் தெரிவித்தார்.

தாய்மொழியின் அவசியத்தை தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது என்றும் தங்களது கலாச்சாரத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மாணவர்களை வழிகாட்டுவதாகவும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...