இந்திய ராணுவ வீரர்களை எதிரி நாட்டிற்கு காவு கொடுத்த இந்திரா காந்தி சாதாரண இரும்பு பெண்மணி அல்ல; துருப்பிடித்த இரும்பு பெண்மணி..! பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். உடனே, 140 கோடி இதயங்கள் பதறி போயின. அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவத்தினர் கொன்று விடுவார்களோ, சித்திரவதை செய்து விடுவார்களோ, இனி அபிநந்தன் காலம் முழுவதும் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவாரோ என இந்தியாவே பதறியது.
அபிநந்தனை பிணையக் கைதியாக வைத்துக் கொண்டு பாகிஸ்தான் ஏதாவது டிமாண்ட் வைக்குமோ என எதிர்பார்த்தனர்.
ஆனால், பிரதமர் நரேந்திரமோடி ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க துணிந்தார். அபிநந்தனை விடுவிக்கா விட்டால் பாகிஸ்தானை எரிக்கத் தயாரானார்.
ஒரு இராணுவ வீரர் தானே என அசால்டாக இருக்கவில்லை. அடுத்தடுத்து வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதன் காரணமாக பாகிஸ்தான் பின்வாங்கியது. அபிநந்தன் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டார்.
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட முதல் இந்திய விமானி அல்ல. ஏற்கனவே, பாகிஸ்தானால் 54 விமானிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்.
1971-ம் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போரில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர்கள் இவர்கள் தான்
1. விங் கமாண்டர் ஹர்சரண் சிங் டான்டோஸ்,
2. ஸ்க்வாட்ரான் தலைவர் மொஹிந்தர் ஜெயின்,
3. ஸ்க்வாட்ரான் தலைவர் ஜே.எம். மிஸ்திரி,
4. ஸ்க்வாட்ரான் தலைவர் ஜே.டி. குமார்,
5. ஸ்க்வாட்ரான் தலைவர் தேவ் பிரசாத் சாட்டர்ஜி,
6. ஃபிளைட் லெப்டினன்ட் சுதிர் கோஸ்வாமி,
7. ஃபிளைட் லெப்டினன்ட் வி.வி. தம்பே, 8. விமான லெப்டினன்ட் நாகசாமி சங்கர்,
9. விமான லெப்டினன்ட் ராம் எம். அத்வானி,
10. விமான லெப்டினன்ட் மனோகர் புரோஹித்,
11. விமான லெப்டினன்ட் தன்மய் சிங் தாண்டோஸ்,
12. விமான லெப்டினன்ட் பாபுல் குஹா,
13. விமான லெப்டினன்ட் சுரேஷ்சந்திர சாண்டல்,
14. விமான லெப்டினன்ட் ஹர்விந்தர் சிங்,
15. விமான லெப்டினன்ட் எல்.எம். சசூன்,
16. விமான லெப்டினன்ட் கே.பி.எஸ். நந்தா,
17. விமான லெப்டினன்ட் அசோக் தவாலே,
18. விமான லெப்டினன்ட் ஸ்ரீகாந்த் மகாஜன்,
19. விமான லெப்டினன்ட் குர்தேவ் சிங் ராய்,
20. விமான லெப்டினன்ட் ரமேஷ் கடம்,
21. விமான லெப்டினன்ட் பிரதீப் வி. ஆப்தே,
22. பறக்கும் அதிகாரி கிருஷ்ணா மல்கானி,
23. பறக்கும் அதிகாரி கே.பி. முரளீதரன், (மலையாளி)
24. பறக்கும் அதிகாரி சுதிர் தியாகி,
25. பறக்கும் அதிகாரி தேஜிந்தர் சேதி..
இவர்கள் போக மீதமுள்ளவர்கள் இந்திய ராணுவ வீரர்கள்; மொத்தம் 54 இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள்.
1971 போரின் போது பாகிஸ்தானில் போர்க் கைதிகளாக இருந்தவர்கள். அதன் பின் திரும்பி வரவே இல்லை.
போருக்குப் பின் சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவுடன் இரண்டு மணி நேரம் மீட்டிங் நடத்திய பின்னர் துணிச்சலான இந்திய இராணுவத்திடம் சரணடைந்த 93,000 பாகிஸ்தான் வீரர்களை நிபந்தனையின்றி விடுவித்தார் ‘இரும்புப் பெண்மணி’ என இப்போது கூறப்படும் இந்திரா காந்தி அம்மையார். ஆனால், பாகிஸ்தானின் வசம் இருந்த நமது 54 வீரர்களை ஒருபோதும் திரும்பக் கேட்கவில்லை.
போருக்குப் பிறகு, முப்படைகளைச் சேர்ந்த 54 பணியாளர்களை ‘செயலில் காணாமல் போனவர்கள்’ என்று இந்தியா அறிவித்தது.
அவர்களின் குடும்பத்தினர் இந்திய அரசாங்கத்திடம் எவ்வளவோ மன்றாடிப்பார்த்தும் அவர்களால் தங்கள் உறவுகளை மீட்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் சிறைகளில் நரகத்தில் இறந்தனர். அதனால்தான் இங்குள்ள அனைவரும் இந்திரா காந்தி ஒரு இரும்புப் பெண்மணி என்பதை மறுக்கிறார்கள். அவர்களை இரும்புப் பெண்மணி என்று அழைக்கக்கூடாது, ஆனால் துருப்பிடித்த பெண்மணி என்று தான் அழைக்க வேண்டும்.
இந்திராகாந்திக்கு பின் வந்த அரசாங்கம் 54 வீரர்களை பற்றி கேட்ட போது. நாங்கள் அப்பவே திருப்பி அனுப்பி விட்டோம். எங்களிடம் யாரும் இல்லை என கை விரித்தது பாகிஸ்தான் அரசாங்கம். மேற்சொன்ன வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரதிநிதிகள் 1983 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அவர்களால் அவர்களின் உறவுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், இன்னும் தங்கள் அன்புக்குரியவர்கள் வருவார்கள் என கண்ணீருடன் காத்திருக்கின்றனர் இக்குடும்பத்தினர்.
இராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்பதற்காக தமிழ் இனத்தையே அழித்தார்கள் நேரு குடும்பத்தினர். சுமார் 2,50,000 ஈழத் தமிழர்கள். இப்போது 54 பேரின் உயிர் என்பது அவங்களுக்கு பெரிது இல்லை. ஏனெனில் தங்களுக்கு வந்தா இரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி..? அந்த வகையில் நரேந்திர மோடி என்னும் இரும்பு மனிதர் எவ்வளவோ மேல்! அபிநந்தன் வராவிட்டால், பாகிஸ்தான் பற்றி எரிந்திருக்கும். பகல்காமில் 26 பேரை கொ*ன்றதுக்கு தான் பாகிஸ்தான் பற்றி எரிந்தது.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |