செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்தி உள்​ளார். டெல்லி பாரத் மண்​டபத்​தில் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்​தினம் தொடங்​கியது.

இந்த மாநாட்​டின் 2-வது நாளான நேற்று பல்​வேறு கருத்​தரங்​கு​கள் நடை​பெற்​றன. மாநாடு தொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை மக்​கள் நலனுக்​காக        பயன்​படுத்த வேண்​டும்.

குறிப்​பாக செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை மக்​களின் நலனுக்​காக ஆக்​கப்​பூர்​வ​மாக பயன்​படுத்த வேண்​டும். டெல்லி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பாரத் மண்​டபத்​தில் சிறப்பு கண்​காட்சி நடை​பெறுகிறது. இதில் புதிய சிந்​தனை​கள், புது​மை​யான கண்​டு​பிடிப்​பு​கள் இடம் பெற்​றுள்​ளன.

உலகின் நன்​மைக்​காக செயற்கை நுண்​ணறிவை வடிவ​மைப்​ப​தில் இந்​திய நிபுணர்​கள் மிகச் சிறப்​பாக பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களின் திறமை, புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் டெல்லி கண்​காட்​சி​யில் காட்​சிப்​படுத்​தப்​பட்டு உள்​ளன. செயற்கை         நுண்​ணறிவை மிகுந்த பொறுப்​புடன் பயன்​படுத்த வேண்​டும்.

இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். மகா​பாரதத்​தில் அறி​வு, ஞானம் தொடர்​பாக கூறப்​பட்​டிருக்​கும்             வாசகங்​களின் ஆடியோவை​யும் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்டு உள்​ளார்.

“பு​தி​ய​வை​களை அறிந்து கொள்ள ஆர்​வம் காட்ட வேண்​டும். அவற்றை உன்​னிப்​பாக கேட்​டறிய வேண்​டும். ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் நினை​வு​கூர வேண்​டும். தீவிர​மாக ஆய்வு செய்ய வேண்​டும். முழு​மை​யான            அர்த்​தத்தை அறிந்து கொள்ள வேண்​டும். உண்​மையை புரிந்து கொள்ள வேண்​டும். இவை அனைத்​தும் ஒன்​றிணைந்​திருப்​பதே ஞானம்” என்று ஆடியோ​வில் கூறப்​பட்டு உள்​ளது.

டெல்லி ஏஐ உச்சி மாநாட்​டின் தொடக்க விழா​வில் பல்​வேறு செயற்கை நுண்​ணறிவு நிபுணர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார். பல்​வேறு முக்​கிய அரங்​கு​களை அவர் பார்​வை​யிட்​டார். இவை தொடர்​பான வீடியோவை​யும் பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில்​ வெளி​யிட்​டு உள்​ளார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...