“இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்” – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் தனி​யார் பங்​களிப்பு மிக​வும் அவசி​யம். முதலீடு, புதுமை கண்​டு​பிடிப்​பில் தனி​யார் துறை கவனம் செலுத்தி நாட்​டின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த பிப்​ர​வரி 1-ம் தேதி மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. பட்​ஜெட்​டுக்​குப் பிந்​தைய இணை​ய​வழிக் கருத்​தரங்க தொடர் நேற்று தொடங்​கியது. “வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்​கான தொழில்​நுட்ப சீர்​திருத்​தங்​கள் மற்​றும் நிதி” என்ற தலைப்​பில் நடை​பெற்ற முதலா​வது கருத்​தரங்​கில் பிரதமர் நரேந்​திர மோடி உரை​யாற்​றி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இதை கருத்​தில் கொண்டு ஒவ்​வொரு ஆண்​டும் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டும் நாட்​டின் வளர்ச்​சிக்கு முன்​னுரிமை அளித்து பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளது.

குறிப்​பாக நாட்​டின் உள்​கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​தும் வகை​யில் மத்​திய பட்​ஜெட்​டில் பல்​வேறு திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்டு உள்​ளன. இதன்​படி நெடுஞ்​சாலை, ரயில்​வே, துறை​முகங்​களின் கட்​டமைப்​பு​கள் விரிவுபடுத்​தப்பட உள்​ளன. மேலும் பட்​ஜெட்​டில் டிஜிட்​டல் கட்​டமைப்​பு, எரிசக்தி திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு இருக்​கிறது.

தொழில் தொடங்க ஏது​வாக சூழல் உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் தனி​யார் பங்​களிப்பு மிக​வும் அவசி​யம். முதலீடு, புதுமை கண்​டு​பிடிப்​பில் தனி​யார் துறை கவனம் செலுத்தி நாட்​டின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். உலக நாடு​களு​டன் தனி​யார் நிறு​வனங்​கள் போட்​டி​யிட வேண்​டும்.

பட்​ஜெட்​டுக்கு பிந்​தைய இணை​ய​வழி கருத்​தரங்​கு​கள் மிக​வும் முக்​கிய​மானவை. இந்த அமர்​வு​கள் வெறுமனே கருத்​துப் பரி​மாற்​றம் என்ற அளவோடு நின்று விடா​மல், பயனுள்ள சிந்​தனையைத் தூண்​டு​வ​தாக இருக்க வேண்​டும். பட்​ஜெட்டை அமல்​படுத்​தும்​போது ஏற்​படும் நடை​முறை சவால்​கள் குறித்து கருத்​தரங்​கில் கருத்​துகளை பரி​மாறிக் கொள்ள வேண்​டும். இதன்​மூலம் பொருளா​தார கொள்​கைகள், திட்​டங்​களை மேம்​படுத்த முடி​யும். பல்​வேறு பிரச்​சினை​களுக்கு எளி​தாக தீர்வு காண முடி​யும். இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...