மோடி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பெருமிதம்!
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பிரதமர் மோடியின் தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டார்.
வறுமை ஒழிப்பும் பொருளாதார வளர்ச்சியும்
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் தற்போது 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச உணவு தானியங்களை வழங்குவதால், மக்கள் உணவுக்காக செலவிட்ட தொகையில் 50 சதவீதத்தை தற்போது பால், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கு செலவிடத் தொடங்கியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் புரட்சியும் வெளிப்படைத்தன்மையும்
பிரதமர் மோடி உருவாக்கிய டிஜிட்டல் புரட்சி ஒரு மைல்கல் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு தானியமும் தகுதியான பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை இது உறுதி செய்கிறது என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 100 ரூபாய் ஒதுக்கினால் 15 ரூபாய் மட்டுமே பயனாளிகளுக்கு சென்றதாகக் கூறப்பட்டது; ஆனால் தற்போது நேரடிப் பணப்பரிமாற்றம் (DBT) மூலம் முழுத் தொகையும் பயனாளிகளுக்குச் சென்றடைகிறது.
நாட்டில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான மொபைல் போன் பயன்பாடு உள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் பயன்பெறும் வகையில் சாதாரண போன்களிலும் இயங்கும் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) வசதியை உருவாக்கியுள்ளோம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியங்கள் வழங்கப்படுகின்றன; இது பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்.
99 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் தரம் குறித்து மாதந்தோறும் 20 லட்சம் பயனாளிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது. புகார்கள் மீது வாட்ஸ்அப் மற்றும் மொபைல் மூலம் உடனடி தீர்வு காணப்படுகிறது.
புதிய திட்டங்கள்: டிஜிட்டல் கரன்சி
ஏழை மக்கள் அரிசி, கோதுமை வாங்க ரிசர்வ் வங்கி மூலமான டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தும் திட்டம் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தற்போது புதுச்சேரியிலும், அடுத்ததாக சண்டிகரிலும் செயல்படுத்தப்படும். இந்த 3 இடங்களின் முடிவுகளை ஆய்வு செய்த பிறகு, திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |