தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

சென்​னைக்கு 2 நாள் பயண​மாக வந்​துள்ள பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினார்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி உள்​ளிட்ட 5 மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இந்​திய தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் மாதம் தேர்​தல் தேதியை அறி​வித்​ததைத் தொடர்ந்​து, தமிழகத்​தில் வரும் 23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. வேட்​புமனுத் தாக்​கல் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரும் நிலை​யில், அரசி​யல் களம் இப்​போதே உச்​சகட்​டப் பிரச்​சா​ரத்​தால் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

புதுச்​சேரி​யில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாகப் பிரச்​சா​ரம் செய்ய பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்​தார். அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் புதுச்​சேரி சென்ற அவர், அங்கு நடை​பெற்ற பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பங்​கேற்​றார். பிரச்​சா​ரத்தை முடித்​துக்​கொண்டு நேற்​றிரவு மீண்​டும் சென்னை திரும்​பிய அவரை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர்​கள் பியூஸ் கோயல், எல்​.​முரு​கன் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் வரவேற்​றனர்.

விமான நிலை​யத்​தில் இருந்து கார் மூலம் கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர விடு​திக்​குச் சென்ற பிரதமர் மோடி, கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களை சந்தித்தார். அப்போது சில முக்​கிய அம்​சங்​கள் விவா​திக்​கப்​பட்​ட​தாகத் தெரி​கிறது. தமிழகத்​தில் பாஜக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் வெற்றி வாய்ப்​பு​கள் மற்​றும் கள நில​வரம் குறித்து அப்​போது அவர் கேட்​டறிந்​தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி​யள​வில் நடைபெறும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்​தில் அடுத்​தகட்​டப் பிரச்​சா​ரத்தை பிரம்​மாண்ட பொதுக்​கூட்​ட​மாக நடத்​து​வதா அல்​லது மக்​களு​டன் நேரடி​யாக உரை​யாடும் வகை​யில் ‘ரோடு ஷோ’ ஆக நடத்​து​வதா என்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​ப​ட உள்ளது.

மேலும் ஏப்.15-ம் தேதியன்று கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​களில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய தேர்​தல் வியூ​கங்​கள் குறித்​தும் அப்போது விரி​வாக விவா​திக்​கப்​ப​ட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் நயி​னார் நாகேந்​திரன், இணையமைச்சர் எல்​.​முரு​கன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்​ணா​மலை,தமிழிசை உள்பட தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களையும் பிரதமர் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. பின்​னர், ஆலோ​சனைகளை முடித்​துக் கொண்​டு, இன்று பிற்பகலில் சென்​னை​யில் இருந்து கேரளா​வுக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்.

பிரதமரின் வரு​கை​யையொட்டி சென்​னை​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக தேர்​தல் களத்​தில் பிரதமரின் இந்த அடுத்​தடுத்த நகர்​வு​கள் அரசி​யல் வட்​டாரத்​தில்​ பெரும்​ எதிர்​பார்​ப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...