கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, மாற்ற நிலையை அடைந்துள்ளதற்காக அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பாவினி என்ற பெயரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி, மேற்கண்ட புதிய அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தோரியத்திலிருந்து, நியூட்ரான் பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது படிப்படியாக முன்னேறி மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியா தனது அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்து, தனது அணுசக்தி பயணத்தில் ஒரு தீர்க்கமான அடியை எடுத்து வைத்துள்ளது. கல்பாக்கத்தில், உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக அணு உலை நிலை மாற்ற நிலையை எட்டியுள்ளது.

இந்த மேம்பட்ட அணு உலை, தனது அறிவியல் திறனின் ஆழத்தையும், நமது பொறியியல் முயற்சியின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், நமது பரந்த தோரியும் இருப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தீர்க்கமான படியாகும். இந்தியாவுக்கு, இதுபெருமைக்குரிய தருணம். நமது விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...