கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, மாற்ற நிலையை அடைந்துள்ளதற்காக அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பாவினி என்ற பெயரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி, மேற்கண்ட புதிய அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தோரியத்திலிருந்து, நியூட்ரான் பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது படிப்படியாக முன்னேறி மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியா தனது அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்து, தனது அணுசக்தி பயணத்தில் ஒரு தீர்க்கமான அடியை எடுத்து வைத்துள்ளது. கல்பாக்கத்தில், உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக அணு உலை நிலை மாற்ற நிலையை எட்டியுள்ளது.

இந்த மேம்பட்ட அணு உலை, தனது அறிவியல் திறனின் ஆழத்தையும், நமது பொறியியல் முயற்சியின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், நமது பரந்த தோரியும் இருப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தீர்க்கமான படியாகும். இந்தியாவுக்கு, இதுபெருமைக்குரிய தருணம். நமது விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...