வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) நிலத்தை மாற்றித் தர தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர் களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, “வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு நிலத்தை மாற்றித்தர மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன; 45 நாட்களுக்குள் நிறைவுபெறும். இது எனதுஅரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ சுகாதாரத்திட்டம் மற்றும் மத்திய அரசின் வேறுபல திட்டங்களையும் மாநிலத்தில் அமல்படுத்தவுள்ளோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி, பள்ளி வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயதுவரம்பை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய மற்றும் மாநிலப் பணிப் பிரிவுகளின் கீழ் வரும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளருக்கு அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது.
முந்தைய அரசு அரசியலமைப்பை மீறி ‘பாரதிய நியாய சம்ஹிதா’ சட்டத்தை அமல்படுத்தவில்லை. தற்போது அச்சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 2025-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையை முந்தைய அரசு புறக்கணித்திருந்தது. தற்போது மேற்குவங்க அமைச்சரவை, அச்சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது” என்று அவர் கூறினார்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |