மோடியின் விமானத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

 மலேசியவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வான்பகுதியில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடியின் விமானத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.

இது குறித்து, தில்லியில் வெள்ளிக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : “பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் சில காரணங்களுக்காக, பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனியில் புதன்கிழமை இரவு தங்கிவிட்டு வியாழக் கிழமை தாயகம் திரும்பினார். அவரது விமானத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் தவறான யூகத்தின் அடிப்படை யிலானவை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போது, உக்ரைன் வான்பகுதியில் செல்லவேண்டாம் என்று ஏர் இந்தியா மற்றும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

விமான வழித் தடத்தில் ஐரோப்பிய நாடுகளையும், ஆசிய நாடுகளையும் இணைக்கும் முக்கியமண்டலமாக உக்ரைன் வான் பகுதி விளங்குவதால், அந்தப்பகுதியில் விமானத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இந்திய அரசு எச்சரித்துள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...