ரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா!

மேற்குவங்கத்தில் ரதயாத்திரை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வில் பாரதிய ஜனதா மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், மேற்குவங்கத்தில், 3 ரத யாத்திரைகளை நடத்த பாரதிய ஜனதா முடிவெடுத்தது. ஆனால், இந்த ரதயாத்திரையால், மத ரீதியாக கலவரங்கள் ஏற்படக்கூடும் என கூறி, மம்தா பேனர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன் தொடுக்கப்பட்ட வழக்கில் ரதயாத்திரையை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து அம்மாநில அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் முன் மேல்முறையீடு செய்தது. அதில், தனிநீதிபதியின் உத்தரவை தடைசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரித்து, அம்மாநில உளவுத் துறையின் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி அமர்வுகூறியது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வின் முன் மேல்முறையீடு செய்ய பாரதிய ஜனதா தலைமை முடிவெடுத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...