ரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா!

மேற்குவங்கத்தில் ரதயாத்திரை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வில் பாரதிய ஜனதா மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், மேற்குவங்கத்தில், 3 ரத யாத்திரைகளை நடத்த பாரதிய ஜனதா முடிவெடுத்தது. ஆனால், இந்த ரதயாத்திரையால், மத ரீதியாக கலவரங்கள் ஏற்படக்கூடும் என கூறி, மம்தா பேனர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன் தொடுக்கப்பட்ட வழக்கில் ரதயாத்திரையை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து அம்மாநில அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் முன் மேல்முறையீடு செய்தது. அதில், தனிநீதிபதியின் உத்தரவை தடைசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரித்து, அம்மாநில உளவுத் துறையின் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி அமர்வுகூறியது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வின் முன் மேல்முறையீடு செய்ய பாரதிய ஜனதா தலைமை முடிவெடுத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.