பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா

பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா பூனையை யாரும் விரோதிப்பதில்லை அன்பும் பாசமும் அதிகம் காட்டுவதுமுண்டு. ஆனால் அதன் சகுனத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளனர் . பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வழி செல்ல வேண்டாம் என்று ஒரு நம்பிக்கை இன்றும் உண்டு. பூனை வலமிருந்து இடது பக்கம் செல்வது நல்லதென்றும் இடமிருந்து வலம் செல்வது தீய சகுனமென்றும் கூறி வருகின்றனர் .

இதற்கு ஒரு அர்த்தம் கொண்டு நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆறாவது உணர்வும் செயல்படும் ஒரு பிராணி பூனை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூனை ஓடி வரும் திசைக்குச் செல்ல வேண்டாம் என்றே ஆதிகாலத்தில் கூறியிருக்கிறார்கள். பூனை ஒரு சாதுவான விலங்கு அது அதைவிட பெரிய விலங்குகளை (அதன் எதிரியை) பார்த்து அதன் திசையை மாற்றும் அதனால் நம் முன்னோர்கள் பூனை ஓடி வரும் திசையில் நாம் சென்றால் அந்த விலங்குகளால் நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரும் என்ற அர்த்தத்தில் அந்த திசையில் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர் .

இதைக்காலப்போக்கில் வலது , இடது என்ற அலங்கரங்களுடன் சகுன விதிய அமைத்து மாற்றி பூனை வலமிருந்து இடது பக்கம் செல்வது
நல்லதென்றும் இடமிருந்து வலம் செல்வது தீய சகுனமென்றும் கூறி வருகின்றனர். நமது முன்னோர்கள் கூறியுள்ள அனைத்துக்கும் நிச்சயம் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. பூனை குறுக்கே வருவது அபசகுணம் அல்ல. முன்னோர்கள் கூறியது பிற்காலத்தில் மூடநம்பிக்கையாக மாற்றப்பட்டுவிட்டது

Tags; பூனை குறுக்கே, பூனை சகுணம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...