பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா

பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா பூனையை யாரும் விரோதிப்பதில்லை அன்பும் பாசமும் அதிகம் காட்டுவதுமுண்டு. ஆனால் அதன் சகுனத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளனர் . பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வழி செல்ல வேண்டாம் என்று ஒரு நம்பிக்கை இன்றும் உண்டு. பூனை வலமிருந்து இடது பக்கம் செல்வது நல்லதென்றும் இடமிருந்து வலம் செல்வது தீய சகுனமென்றும் கூறி வருகின்றனர் .

இதற்கு ஒரு அர்த்தம் கொண்டு நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆறாவது உணர்வும் செயல்படும் ஒரு பிராணி பூனை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூனை ஓடி வரும் திசைக்குச் செல்ல வேண்டாம் என்றே ஆதிகாலத்தில் கூறியிருக்கிறார்கள். பூனை ஒரு சாதுவான விலங்கு அது அதைவிட பெரிய விலங்குகளை (அதன் எதிரியை) பார்த்து அதன் திசையை மாற்றும் அதனால் நம் முன்னோர்கள் பூனை ஓடி வரும் திசையில் நாம் சென்றால் அந்த விலங்குகளால் நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரும் என்ற அர்த்தத்தில் அந்த திசையில் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர் .

இதைக்காலப்போக்கில் வலது , இடது என்ற அலங்கரங்களுடன் சகுன விதிய அமைத்து மாற்றி பூனை வலமிருந்து இடது பக்கம் செல்வது
நல்லதென்றும் இடமிருந்து வலம் செல்வது தீய சகுனமென்றும் கூறி வருகின்றனர். நமது முன்னோர்கள் கூறியுள்ள அனைத்துக்கும் நிச்சயம் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. பூனை குறுக்கே வருவது அபசகுணம் அல்ல. முன்னோர்கள் கூறியது பிற்காலத்தில் மூடநம்பிக்கையாக மாற்றப்பட்டுவிட்டது

Tags; பூனை குறுக்கே, பூனை சகுணம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...