நாடி சுத்தி பயிற்சி

 தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.

எனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை ஆகும்.

நாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச் சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.

ஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.

முதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.

இந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.

ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது. வைட்டமின் ‘டி’ சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.

நுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.

நன்றி : பானுகுமார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...