டிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் போஸ்ட்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதாக வேண்டுமென்றே தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்டுடிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டார்; இந்தியாவுடனான உறவில் முன்னாள் அதிபர்கள் செய்த சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ள செய்திகட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு உச்சிமாநாட்டின் போது தம்மைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வுகாண உதவிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று டிரம்ப் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்று இந்தியா தெரிவித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இந்திய அரசு உடனடியாக இதற்கு மறுப்புதெரிவித்தது. டிரம்பிடம் மோடி அத்தகைய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்றும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு விவகாரம் என்றும் இந்திய அரசு கூறியது.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட விளக்கத்திலும், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட இருதரப்பு விவகாரம்; இரு நாடுகளும் விரும்பி கேட்டுக் கொண்டால், அந்தவிவகாரத்துக்கு தீர்வுகாண உதவி செய்ய தயாராய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்  நாளிதழில் இந்தவிவகாரம் தொடர்பாக ஒரு செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீய ரீதியில் டிரம்ப் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார். இந்தியாவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தவறிழைத்து விட்டார்.

சீனாவின் எழுச்சிக்கு பதிலடிகொடுக்க முக்கியமான நாடான இந்தியாவின் நட்புறவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் நட்புறவை அமெரிக்கா இழக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுடனான  நட்புறவை அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூபுஷ், ஒபாமா ஆகியோர் பேணிவளர்த்தனர். சில அறியா வார்த்தைகள் மூலம், அவர்களது சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், அமெரிக்கத்தயாரிப்பு பொருள்கள் மீது இந்தியா அதிகவரிகளை விதிப்பதாக  குற்றம் சாட்டியிருந்தார். ஜிஎஸ்பி திட்டத்தின்கீழ் வளரும்நாடு என்ற முறையில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையையும் அமெரிக்கா திரும்பப்பெற்றது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருள்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...