டிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் போஸ்ட்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதாக வேண்டுமென்றே தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்டுடிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டார்; இந்தியாவுடனான உறவில் முன்னாள் அதிபர்கள் செய்த சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ள செய்திகட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு உச்சிமாநாட்டின் போது தம்மைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வுகாண உதவிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று டிரம்ப் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்று இந்தியா தெரிவித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இந்திய அரசு உடனடியாக இதற்கு மறுப்புதெரிவித்தது. டிரம்பிடம் மோடி அத்தகைய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்றும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு விவகாரம் என்றும் இந்திய அரசு கூறியது.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட விளக்கத்திலும், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட இருதரப்பு விவகாரம்; இரு நாடுகளும் விரும்பி கேட்டுக் கொண்டால், அந்தவிவகாரத்துக்கு தீர்வுகாண உதவி செய்ய தயாராய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்  நாளிதழில் இந்தவிவகாரம் தொடர்பாக ஒரு செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீய ரீதியில் டிரம்ப் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார். இந்தியாவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தவறிழைத்து விட்டார்.

சீனாவின் எழுச்சிக்கு பதிலடிகொடுக்க முக்கியமான நாடான இந்தியாவின் நட்புறவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் நட்புறவை அமெரிக்கா இழக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுடனான  நட்புறவை அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூபுஷ், ஒபாமா ஆகியோர் பேணிவளர்த்தனர். சில அறியா வார்த்தைகள் மூலம், அவர்களது சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், அமெரிக்கத்தயாரிப்பு பொருள்கள் மீது இந்தியா அதிகவரிகளை விதிப்பதாக  குற்றம் சாட்டியிருந்தார். ஜிஎஸ்பி திட்டத்தின்கீழ் வளரும்நாடு என்ற முறையில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையையும் அமெரிக்கா திரும்பப்பெற்றது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருள்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...