டிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் போஸ்ட்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதாக வேண்டுமென்றே தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்டுடிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டார்; இந்தியாவுடனான உறவில் முன்னாள் அதிபர்கள் செய்த சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ள செய்திகட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு உச்சிமாநாட்டின் போது தம்மைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வுகாண உதவிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று டிரம்ப் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்று இந்தியா தெரிவித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இந்திய அரசு உடனடியாக இதற்கு மறுப்புதெரிவித்தது. டிரம்பிடம் மோடி அத்தகைய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்றும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு விவகாரம் என்றும் இந்திய அரசு கூறியது.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட விளக்கத்திலும், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட இருதரப்பு விவகாரம்; இரு நாடுகளும் விரும்பி கேட்டுக் கொண்டால், அந்தவிவகாரத்துக்கு தீர்வுகாண உதவி செய்ய தயாராய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்  நாளிதழில் இந்தவிவகாரம் தொடர்பாக ஒரு செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீய ரீதியில் டிரம்ப் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார். இந்தியாவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தவறிழைத்து விட்டார்.

சீனாவின் எழுச்சிக்கு பதிலடிகொடுக்க முக்கியமான நாடான இந்தியாவின் நட்புறவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் நட்புறவை அமெரிக்கா இழக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுடனான  நட்புறவை அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூபுஷ், ஒபாமா ஆகியோர் பேணிவளர்த்தனர். சில அறியா வார்த்தைகள் மூலம், அவர்களது சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், அமெரிக்கத்தயாரிப்பு பொருள்கள் மீது இந்தியா அதிகவரிகளை விதிப்பதாக  குற்றம் சாட்டியிருந்தார். ஜிஎஸ்பி திட்டத்தின்கீழ் வளரும்நாடு என்ற முறையில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையையும் அமெரிக்கா திரும்பப்பெற்றது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருள்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...