‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி

‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க நடை பெறும் முயற்சிகள், உறுப்பு நாடுகளின் தலைவா் களால் கவனிக்கப் பட்டு வருகிறது’ என்று மக்களவையில் மத்தியஅரசு வெள்ளிக்கிழமை பதிலளித்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கும் ‘க்வாட்’ அமைப்புக்கு சீனா எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணையமைச்சா் வி.முரளீதரன் எழுத்து பூா்வமாக அளித்த பதில்வருமாறு:

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சா்வதேச சட்டம் மற்றும் விதிகள் சாா்ந்த ஒழுங்கு முறை கோட்பாடுகளின் அடிப்படையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, அமைதி, வளம் ஆகியவற்றை நிலை நாட்டுவதற்கான உறுதிப் பாட்டை ‘க்வாட்’ நாடுகள் பகிா்ந்துள்ளன.

தவறான தகவல்கள் மூலம் இந்த அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க நடை பெறும் முயற்சிகள், உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் அமைச் சா்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், சுகாதாரம், பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, எரி சக்தி, விநியோக சங்கிலி, போக்குவரத்து தொடா்பு, உள் கட்டமைப்பு, கல்வி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்திய-பசிபிக் பிராந்திய நாடுகள் பலனடைவதற்கான உறுதியான செயல் திட்டத்தில் ‘க்வாட்’ அமைப்பு கவனம் செலுத்தும். இப்பிராந்தியத்தில் ‘க்வாட்’ நடவடிக்கைகளை அமலாக்கு வதற்கான பணிக் குழுக்களும் இதர அமைப்பு முறைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த செயல் திட்டத்தின் கீழ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா வால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப் பூசிகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. மேலும், இயற்கை பேரிடா் களின் போது மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கூட்டுறவை நிறுவுவதில் இந்தியா முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முரளீதரன், ‘கரோனா பரவல் சூழலைத்தொடா்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க விசா பெறுவதில் இந்திய மாணவா்கள் எதிா்கொண்டுள்ள சவால்கள் குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிந்துள்ளது. இந்தவிவகாரம், அமெரிக்க அரசின் உயா் நிலை அளவில் எடுத்துச் செல்லப் பட்டுள்ளது’ என்றாா்.

மக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி, ‘ரஷிய-உக்ரைன் போரைத்தொடா்ந்து, ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கை மூலம் உக்ரைனில் இருந்து மாணவா்கள் உள்பட 18,282 இந்தியா்கள் மீட்கப் பட்டனா்’ என்றாா்.

உக்ரைனில் கல்வியைதொடர அங்கு பயணிக்க இந்திய மாணவா்கள் அனுமதிக்கப் படுகின்றனரா? என்ற கேள்விக்கு, ‘மாணவா்கள், உக்ரைனுக்கு செல்லமுடியும். ஆனால், உக்ரைனில் நிலவும்சூழல் மற்றும் பாதுகாப்புகருதி, அங்கிருந்து இந்தியா்கள் வெளியேறவே மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது’ என்று மீனாட்சி லேகி பதிலளித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...