சுஷ்மா ஸ்வராஜ் தனிவார்டுக்கு மாற்றப்பட்டார்

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (64), தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனிவார்டுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டார்.


சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட சுஷ்மாஸ்வராஜ் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 7-ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில் அவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க பல்வேறுதரப்பினர் முன்வந்த நிலையில், நேரடியாக அவருக்கு குடும்பத்தைச் சாராத ஒருபெண் சிறுநீரகத்தை அளித்தார்.இதைத் தொடர்ந்து சுஷ்மாவுக்கு கடந்த 10-ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுஷ்மா, செவ்வாய்க்கிழமை தனிவார்டுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எம்.சி. மிஸ்ரா தெரிவித்ததாவது: அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள அமைச்சர் சுஷ்மாவின் உடல்நிலையை எங்கள் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 3 நாள்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.


அவரது உடல்நிலைக்கேற்ப, அடுத்த 7 முதல் 10 தினங்களுக்குள் வீடுதிரும்புவார். அதேவேளையில், அமைச்சருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கியபெண்ணும் வீடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மிஸ்ரா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...