சுஷ்மா ஸ்வராஜ் தனிவார்டுக்கு மாற்றப்பட்டார்

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (64), தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனிவார்டுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டார்.


சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட சுஷ்மாஸ்வராஜ் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 7-ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில் அவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க பல்வேறுதரப்பினர் முன்வந்த நிலையில், நேரடியாக அவருக்கு குடும்பத்தைச் சாராத ஒருபெண் சிறுநீரகத்தை அளித்தார்.இதைத் தொடர்ந்து சுஷ்மாவுக்கு கடந்த 10-ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுஷ்மா, செவ்வாய்க்கிழமை தனிவார்டுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எம்.சி. மிஸ்ரா தெரிவித்ததாவது: அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள அமைச்சர் சுஷ்மாவின் உடல்நிலையை எங்கள் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 3 நாள்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.


அவரது உடல்நிலைக்கேற்ப, அடுத்த 7 முதல் 10 தினங்களுக்குள் வீடுதிரும்புவார். அதேவேளையில், அமைச்சருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கியபெண்ணும் வீடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மிஸ்ரா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...